ஆயுதங்களை தயாரித்து விற்று போர்களை தூண்டும் நாடுகள்!

உல­கெங்கும் இடம்­பெற்று வரும் போர்­களில் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக ஆயு­தங்­களைத் தயா­ரி­த்து  விற்று வரும் நாடுகள்  பின்னர் அதே போர்கள் கார­ண­மாக   நாட்டை விட்டு வெளியேறும் அக­தி­களை ஏற்க  மறுத்து வரு­வ­தாக பாப்­ப­ரசர்  பிரான்சிஸ் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

இத்­தா­லிய குடி­யேற்­ற­வாசி பெற்­றோ­ருக்கு பிறந்த பாப்­ப­ரசர் பிரான்சிஸ் (82 வயது)  குடி­யேற்­ற­வா­சிகள் மற்றும் அக­தி­க­ளுக்கு ஆத­ர­வாக குரல் கொடுத்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

அவர் அமெ­ரிக்க  ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும்  ஐரோப்­பா­வி­லுள்ள  குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு எதி­ரான   அர­சி­யல்­வா­தி­களின் குடி­வ­ரவுக் கொள்கை தொடர்பில்   அவர் கடும் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்தி வரு­கிறார்.

இந்­நி­லையில் அவர் நேற்று முன்­தினம்  உலக   குடி­யேற்­ற­வா­சிகள் மற்றும் அக­திகள்  தினத்­தை­யொட்டி   வத்­திக்­கானில் சென்­பீற்றர்ஸ் சதுக்­கத்தில்  இடம்­பெற்ற ஆரா­தனை நிகழ்வில்  ஆற்­றிய உரையின் போதே  மேற்­படி கருத்தைத் தெரி­வித்தார்.

உலகில் சில பிராந்­தி­யங்­களை   மட்­டுமே  போர்கள் பாதித்­துள்­ளன எனவும் அந்தப் பிராந்­தி­யங்­க­ளுக்கு  போர்­க­ளுக்­கான ஆயு­தங்­களை விற்று போரைத் தூண்டி வரும் நாடுகள்  பின்னர் அந்தப்  போர்­களால் உரு­வா­கிய அக­தி­களை  ஏற்க விருப்­ப­மற்றனவாக உள்­ள­தாக  அவர் கூறினார்.

மேற்­படி ஆரா­தனை நிகழ்வில்  பல குடி­யேற்­ற­வா­சி­களும் அவர்­க­ளுக்கு உதவும் குழுக்­களைச் சேர்ந்த பலரும் பங்­கேற்­றனர். அத்­துடன் இதன்­போது  பாரம்­ப­ரிய தேவா­லய  இசை­யுடன் ஆபி­ரிக்க, ஸ்பானிஷ் மற்றும் போர்­த்துக்­கேய  இசைகள் கலந்து இசைக்­கப்­பட்­டன.

தவ­றாக நடத்­தப்­பட்டு   உல­க­மெங்­கு­முள்ள வீதி­களில் கைவி­டப்­பட்ட  அனைத்து அயலவர்களையும்   தேற்றி  அவர்களுக்கு தங்குமிட வசதியை ஏற்படுத்திக்கொடுப்பது அனைத்துக் கிறிஸ்தவர்களதும் கடமையாகவுள்ளதாக பாப்பரசர் வலியுறுத்தினார்.