ரி – 56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்பு!

பதுளை – மகியங்கனை வீதியின் தல்தெனவின் உள்ள பாலத்திற்கு அருகில் இருந்து ரி- 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகள்  மீட்டக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் தகவலுக்கமைய அப்பகுதியை சோதனையிட்ட காவல் துறையினர்  பொதியிடப்பட்ட நிலையில் ரி- 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 737 ரவைகளை மீட்டுள்ளனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகளை யார் அப்பகுதியில் வைத்திருப்பார் என்ற கோணத்தில் காவல் துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.