முன்னாள் கடற்படை அதிகாரி கைது!

எவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து சென்று அரசாங்கத்துக்கு 1140 கோடி ரூபா நட்டதை ஏற்படுத்திய விவகாரம் தொடர்பில் முன்னாள் கடற்படை அதிகாரி விஸ்வாஜித் நந்தனா தியபலனகே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று அதிகாலை 1.00 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.