உயிரிழந்தவர்கள், வெளிநாடு சென்றவர்களின் விபரங்கள் தேர்தல் ஆணையகத்தால் சேகரிப்பு!

2018 ஆம் ஆண்டு தேர்தல் வாக்களார் இடாப்பில் பதிவுசெய்யப்பட்ட பின்னர் வெளிநாடு சென்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகல்வகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 க்கும் திகதிக்குப் பின்னர் உயிரிழந்தவர்கள் மற்றும் வெளிநாடு சென்றவர்கள் தொடர்பான விபரங்களை ஒவ்வொரு கிராம சேவையாளர்களும் சேமித்து அது குறித்த தகவல்களை மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் மேற்படி தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.