ஆறு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!

ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரையில் ஆறு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒரு சுயேச்சை வேட்பாளர் மற்றும் மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் நேற்று(வெள்ளிக்கிழமை) கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

சுயேட்சை வேட்பாளராக அபரெக்கே புன்யானந்த தேரரும் அபே ஜனபல சார்பில் சமன் பெரேராவும் நேற்று கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.அமரசிங்க மற்றும் இலங்கை சோசலிசக் கட்சி சார்பில் கலாநிதி அஜந்தா பெரேரா ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.