பிரியா நடேஸ் குடும்பத்தை நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் நாளை வரை தடை!

ஈழ தமிழ் அகதிகள் குடும்பத்தை நாடு கடத்துவதை தடுக்கும் உத்தரவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் நாளைவரை நீடித்துள்ளது.

பிரியா நடேஸ் தம்பதியினரையும் குழந்தைகளையும் நாடு கடத்துவதை தடுத்து நீதிமன்றம் விதித்த உத்தரவு இன்றுடன் முடிவடையிருந்த நிலையிலேயே நீதிமன்றம் தடை உத்தரவை நாளை வரை நீடித்துள்ளது.

தனது முடிவு குறித்து தீர்மானிப்பதற்கு மேலும் கால அவகாசம் அவசியம் என்பதால் தடை உத்தரவை நாளை வரை நீடித்துள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் கடும் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.