‘5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லை!

5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என, இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.

பதில் நிறைவேற்று பணிப்பாளர் சுரங்கனி ஆரியவங்ச, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை கூறியுள்ளார்.

இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் முன்னெடுத்த ஆய்வின் போது இந்த தகவல் தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களின் 87 சதவீதமானவர்கள் பெருந்தோட்டங்கள் மற்றும் கிராமங்களை சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.