அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவி பலி!

அவுஸ்திரேலியாவில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கையை சேர்ந்த 20 வயதான நிசாலி பெரேரா என்ற மாணவியே உயிரிழந்துள்ளதாக Monash பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

கறுப்பு நிறத்திலான வாகனம் ஒன்றே மாணவி மீது மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற பகுதியிலுள்ள கண்காணிப்பு கமராவின் உதவியுடன் விபத்தை ஏற்படுத்திய நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இது தொடர்பில் காவல் துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.