ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரேமதா­சவின் பெய­ருடன் மேலும் நால்­வரின் பெயர் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், இம்­மாத இறு­திக்குள் பல கேள்­வி­க­ளுக்கு விடை கிடைக்கும் எனவும் கட்­சியின்  தவி­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசீம் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்த ஐக்­கிய தேசிய கட்­சியின் நிலைப்­பாடு என்ன என்­பதை வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில்,

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து அறி­விக்க இப்­போது  எந்த அவ­சி­யமும் இல்லை. இன்­னமும் ஜனா­தி­பதி தேர்தல் குறித்த அறி­விப்­புகள் வரவும் இல்லை. கட்­சிக்குள் ஒரு சிலர் தமது கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். அது அவர்­களின் ஜன­நா­யக உரிமை. ஆனால் கட்­சி­யாக இன்­னமும் இறுதித் தீர்­மானம் எடுக்­க­வில்லை. எவ்­வாறு இருப்­பினும் இம்­மாத இறு­திக்குள் அறி­விப்­புகள் பல வெளி­வ­ர­வுள்­ளன.

அதில் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்த அறி­விப்­பையும் எதிர்­பார்க்க முடியும். அடுத்த வாரம் ஐக்­கிய தேசிய கட்­சியின் செயற்­குழு கூடும். இதில் பிர­தான கார­ணிகள் குறித்தும் கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள கருத்து வேறு­பா­டுகள் குறித்தும் கவனம் செலுத்­தப்­படும். அத்­துடன் கூட்­ட­ணிக்­கான யாப்பு உரு­வாக்கம் குறித்தும் கலந்­து­ரை­யாட  வேண்­டி­யுள்­ளது. ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்த வினா­வுக்கு, அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவின் பெயர் அதி­க­மாக பரிந்­து­ரைக்­கப்­பட்டு வரு­கின்­றது. அதேபோல் மேலும் நால்வர் பெயர்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­களும் அவ்­வப்­போது ஊட­கங்கள் முன்­னி­லையில் தம்மை வேட்­பா­ள­ராக கூறி­கின்­றனர். கட்சி சார்­பிலும் சிலரின் பெயர்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.  சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய, சரத் பொன்­சேகா ஆகி­யோரின் பெயர்­க­ளையும்  ஊட­கங்­களில் அவ­தா­னிக்க முடி­கின்­றது. எவ்­வாறு இருப்­பினும் கட்­சிக்­கென்ற ஒழுக்கம் நடை­மு­றைகள் உள்­ளன. எனவே கட்­சி­யாக எடுக்கும் தீர்­மா­னங்கள் தனிநபர் தீர்­மா­ன­மாக அமை­யாது. இது கட்­சியின் செயற்­குழு தீர்­மா­ன­மா­கவே அமையும்.

இம்­மாத இறு­திக்குள் ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் முன்­வைக்­கப்­பட்டுள்ள கேள்­வி­க­ளுக்கு விடைகிடைக்கும். எனி னும் கட்சிக்குள் பிளவுகள் எதுவும் ஏற்படவில்லை. கட்சியை பிளவுபடுத்த இடமளிக்கப்போவதும் இல்லை. இறுதியாக கட்சியின் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு அமைய இறுதி நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்றார்.