அமேசன் காடுகள் உலகிற்கு ஜீவாதார சுவாசப்பையாகும்!-பாப்பரசர்

பிரே­சிலின் அமேசன் மழைக்­காட்­டுப் பிராந்­தி­யத்தில் நூற்­றுக்­க­ணக்­கான காட்டுத் தீ சம்­ப­வங்கள்  புதி­தாக இடம்­பெற்று  பரவி வரு­கின்ற நிலையில்  அதனை அணைக்கப் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான படை­யினர் போராடி வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் பாப்­ப­ரசர் பிரான்சிஸ் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை  வத்­திக்­கானில் இடம்­பெற்ற ஆரா­த­னை­களைத் தொடர்ந்து ஆற்­றிய உரை யின்போது  அமேசன் காட்டுத் தீ குறித்து கவ­லையை வெளியிட்­டுள்ளார்.

அமேசன் மழைக்­கா­டுகள் இந்த உலகின் முக்­கிய சுவாசப்­பை­யாக உள்­ள­தாக  அவர் தெரி­வித்தார்.

“அமே­சனில் பாரிய காட்டுத் தீ பரவி வரு­வது குறித்து நாம் மிகவும் கவ­லை­ய­டைந்­துள்ளோம். அந்த  (சுவா­சப்பை போன்று   வளியைச் சுத்­தி­க­ரித்து வழங்கும்) காட்டு சுவாசப்பை எமது  கோளுக்கு மிகவும்  ஜீவா­தா­ர­மான ஒன்­றாகும்” என அவர் கூறினார்.

அமேசன் பிராந்­தி­யத்தில் சுமார் 1,663 புதிய தீ சம்­ப­வங்கள் இடம்­பெ­ற­்றுள்­ள­தாக பிரே­சிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறு­வகம் தெரி­விக்­கி­றது.

இந்தத் தீயை அணைக்கும் செயற்­கி­ர­மத்தில் 6 பாரிய தீய­ணைப்பு விமா­னங்கள் ஈடு­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில் ஜி–7 உச்­சி மா­நாட்டில் கலந்துகொள்ள பிரான்­ஸுக்கு சென்­றுள்ள அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பும் பிரித்­தா­னிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸனும் இந்தக் காட்டுத் தீயை அணைக்கும் செயற்கிரமத்திற்கு உதவ நடவடிக்கை எடுத்துள்ளனர்.