அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 10 பேர் கைது!

கடல் வழியாக  அவுஸ்திரேலியா செல்லும் நோக்கில் வென்னப்புவ பகுதியில் உள்ள வீ்டொன்றில் தங்கியிருந்த 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ, நைனாமடம் பகுதியில் உள்ள வீட்டில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சிலர் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சிலாபம் பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.