கரன்னாகொட, ரோஷான் குணதிலக்கவுக்கு பதவி உயர்வு!

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் விமானப்படைத் தளபதியான ஏர் சீஃப் மார்ஷல் ரோஷான் குணதிலக்க ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அட்மிரல் வசந்த கரன்னகொட 2005 முதல் 2009 வரை கடற்படைத் தளபதியாகவும், ஏர் சீஃப் மார்ஷல் ரோஷான் குணதிலக்க 2006 முதல் 2011 வரை விமானப்படைத் தளபதியாகவும் பணியாற்றினார்.

பதவி உயர்வு தொடர்பான கூடுதல் வர்த்தமானி அறிவிப்பு நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.