வட பிரேசிலில் கலவரம் இடம்பெற்ற சிறைச்சாலையொன்றிலிருந்து வாகனமொன்றில் கொண்டு செல்லப்பட்ட 4 கைதிகள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.
பரா பிராந்தியத்தில் அளவுக்கதிகமான கைதிகளைக் கொண்ட சிறைச்சாலையில் இரு எதிர்க் குழுக்களைச் சேர்ந்த கைதிகளிடையே நேற்று முன்தினம் இடம்பெற்ற கலவரத்தில் 57 கைதிகள் உயிரிழந்துள்ள நிலையில் அந்த சிறைச்சாலையிலிருந்து அபாயகரமான சில கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு இடமாற்றும் நடவடிக்கை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து ட்ரக் வண்டியில் அமைக்கப்பட்ட கைதிகளுக்கான 4 வேறுபட்ட பிரிவுகளில் 30 கைதிகள் கொண்டுசெல்லப்பட்டனர்.
இதன்போதே 4 கைதிகள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக பரா மாநில பொதுப் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு பிரிவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.