அவசரகாலச் சட்டத்தின் நீடிப்பானது அமைதியான ஒன்றுகூடலுக்குத் தடையாக உள்ளது!

இலங்­கையில் அவ­ச­ர­காலச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்­கின்­ற­மை­யா­னது மக்­களின் அமை­தி­யான ஒன்­று ­கூ­ட­லுக்கு தடை­யாக காணப்­ப­டு­கின்றது.   அத்­துடன் இலங்­கை­யா­னது ஐக்­கிய­ நா­டுகள் மனித உரிமை பேர­வை­யுடன்  தொடர்ந்து இணைந்து பணி­யாற்­ற­வேண்டும். இலங்­கைக்கு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­குவ­தற்கு ஐக்­கி­ய­நா­டுகள் சபை தயா­ரா­கவே இருக்­கின்­றது என்று   இலங்­கைக்கு விஜயம் செய்த   ஐ.நா.வின்  அமை­தி­யான  ஒன்­று­கூ­ட­லுக்­கான  விசேட அறிக்­கை­யாளர்  கிளமன்ட்  நைலட்­சோஸி தெரி­வித்தார்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு  பதி­லாக  கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள  பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் தொடர்ப்பில் சரி­யான ஆலோ­ச­னை­களை வழங்க ஐக்­கிய நாடுகள் சபை எப்­போ­துமே தயா­ரா­கவே இருக்­கின்­றது என்றும்   அவர் குறிப்­பிட்டார்.

தனது இலங்கை விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு நேற்­றைய தினம்  கொழும்­பி­லுள்ள ஐ.நா. அலு­வ­ல­கத்தில்   நடத்­திய  செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே   அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் அங்கு  மேலும்  குறிப்­பி­டு­கையில்

மக்கள் ஒன்று கூடி தமது குரல்­களைக் கேட்கச் செய்யும் ஆற்­ற­லிலே, அமை­தி­யாக ஒன்­று­கூ­டு­வ­தற்கும் சங்­கங்­களை அமைப்­ப­தற்­கு­மான உரி­மை­களின் வேர்கள் தங்­கி­யுள்­ளன. இலங்கை நாடு இது­வ­ரையில் அடைந்­துள்ள ஜன­நா­யக முன்­னேற்­றத்தை மேலும்  மெரு­கூட்­டு­வ­தென்­பது, இலங்கை மக்கள் ஐக்­கி­யத்­துடன் இயங்­கு­வ­தி­லேயே தங்­கி­யுள்­ளது.

“இலங்கை பல சர்­வ­தேச மனித உரிமைப் பொறி­மு­றை­களின்  பங்­கு­தா­ர­த­ரப்பு நாடாகும். எனவே, அரசு பல மனித உரிமைக் கடப்­பா­டு­களைக் கொண்­டுள்­ளது. இதன் கார­ண­மாக அர­சிற்கு பல தெளி­வான கடப்­பா­டுகள் உண்டு. இக்­க­டப்­பா­டு­களைப் பிர­தி­ப­லிப்­ப­தற்கு பல சட்­ட­வாக்­கங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. இக்­க­டப்­பா­டு­களை முழு­மை­யாக அடை­வ­தற்கு சமூ­கத்தின் பிரி­வி­னைகள் அச்­சு­றுத்­த­லாக அமை­கின்­றன.”

ஜன­நா­யக ரீதி­யான நன்­மை­களின் பின்­ன­டை­வுகள் பற்­றிய பரந்­து­பட்ட அச்­சு­றுத்­தல்கள்  சமூ­கத்தின் அனைத்து துறை­க­ளாலும் தெரி­விக்­கப்­பட்­டது.   சுதந்­தி­ரத்­திற்­கான மக்­களின் அபி­லா­சை­க­ளையும் சட்­டத்தின் ஆட்­சி­யையும் ஜன­நா­ய­கத்­தையும் நாட்டின் அர­சி­யல்­த­லை­வர்கள் நிரா­க­ரிக்­க­கூ­டா­தென்­பது மிக முக்­கி­ய­மா­னது. போராடி பெற்ற ஜன­நா­யக உரி­மைகள் தொடர்­பான முன்­னேற்­றத்தைக் குறைத்து மதிப்­பி­டுதல் போன்ற விட­யங்­களை எதிர்­வரும் தேர்­தல்­க­ளின்­போது அர­சியல் தலை­வர்கள் மேற்­கொள்­ளக்­கூ­டாது.

அமை­தி­யாக ஒன்­று­கூடல், சங்­கங்­களை அமைக்கும் சுதந்­திரம் என்­பன இலங்கை அர­சியல் அமைப்பில் பேணிப் பாது­காக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால், தண்­டனைக் சட்டக் கோவை, சிவில் அர­சியல்    உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச சம­வாயச் சட்டம் மற்றும் பயங்­க­ர­வாதத் தடைச் சட்டம் என்­பன மேற்­படி உரி­மை­க­ளுக்கு தீஙகு ஏற்­ப­டுத்தும் வாய்ப்­புக்­களை உண்டு பண்ணும்.

“காணாமல் ஆக்­கப்­ப­டுதல், காணி உரி­மைகள், வாழ்­வா­தாரம், வளங்­க­ளையும் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளையும் அணு­குதல் என்­பவை தொடர்­பாக பார­பட்­ச­மான முறையில் இந்தச் சட்­டங்கள் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வது மீதும் எனது கவனம் ஈர்க்­கப்­பட்­டுள்­ளது.”

“ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்­கான கார­ணங்­க­ளையும் ஆர்ப்­பாட்­டங்­க­ளின்­போது பங்­கு­பற்­று­னர்கள் முன்­வைக்கும் பிரச்­சி­னைகள் குறித்தும் அர­சாங்கம் கவனம் செலுத்தி நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.”

ஏப்ரல் மாதத்தில் பேர­ழி­வையும் அதிர்ச்­சி­யையும் ஏற்­ப­டுத்­திய பயங்­க­ர­வாதத் தாக்­குதல் அதே­ச­மயம் சென்ற ஆண்டு அர­சியல் அமைப்பு ரீதி­யான நெருக்­க­டிகள் என்­பன ஏற்­பட்ட சூழலில் அதற்கு மேல­தி­க­மாக தற்­போ­தைய அவ­ச­ர­கா­லச்­சட்­டத்தின்  பிர­யோகம் என்­பன மன­அ­ழுத்­தங்­களை அதி­க­ரிக்கச் செய்­துள்­ளது.

சிவில் சமூ­கத்தின் சில உறுப்­பி­னர்கள் தமது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­திலும் அமை­தி­யாக ஒன்­று­கூ­டு­வ­திலும் பல கஷ்­டங்­களை எதிர்­நோக்­கு­கின்­றனர்.

அண்­மையில் பல சட்­ட­வாக்கச் சீர்­தி­ருத்­தங்­க­ளுக்­கான முன்­மொ­ழி­வுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களை ஒழுங்­கு­ப­டுத்தும் சட்­டங்­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.   பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­ட­மூலம் சகல  தொழிற்­சட்­டங்­க­ளையும் ஒருங்­கி­ணைப்­ப­தற்­கான சட்­ட­மூலம் இவற்றுள் சில­வாகும். எவ்­வா­றா­யினும் சிவில் சமூக பரப்­பு­ரை­யா­ளர்கள் முன்­வைத்த கடு­மை­யான எதிர்ப்பு கார­ண­மாக சில திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. ஏற்­க­னவே உள்ள உரி­மைகள் கடு­மை­யாக குறைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் மேற்­படி சட்ட மூலங்கள் போதிய பங்­கேற்பு ஆலோ­சனை இன்றி வரை­யப்­பட்­ட­தா­கவும் சிவில் சமூகப் பரப்­பு­ரை­யா­ளர்கள் எடுத்துக் கூறு­கின்­றனர்.

இத்­த­கைய எதிர்ப்பு இயக்­கங்­க­ளை­ய­டுத்து அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் தொடர்­பான சட்­ட­மூலம் குறிப்­பிட்ட அமைச்­சி­னரால் விலக்­கிக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தோடு சிவில் சமூகம் தமது சட்டவரைவினை  கலந்துரையாடலுக்கு முன்வைப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது”

2009 இல் நீண்டகால அழிவுகரமான யுத்தத்தின் பின்னர் பாதுகாப்புத்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமை, சிவில் சமூகம் இயங்குவதில் கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாகவும் ஏனைய சிவில் சமூக நடவடிக்கைகள் பற்றியும் தொடர்ச்சியான புலனாய்வுக் கட்டமைப்புக்களைக் கண்காணிப்பில் ஈடுபடுத்துவதன் காரணமாக மனித உரிமை  பாதுகாவலர்கள்     மீது தொந்தரவையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ள நிலைமை  அறிக்கையிடப்பட்டுள்ளது.