புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட நீர்­மூழ்கிக் கப்பல் வடகொரியத் தலை­வரால் பரி­சோ­தனை!

வடகொரியத் தலைவர் கிம் யொங் உன்  தனது நாட்டால்  புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­ப ட்ட நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்றை பார்­வை­யிட்டு அதன் தந்­தி­ரோ­பாய ஆற்­றல்கள்  மற் றும்  ஆயுத முறை­மை­களை பரி­சோ­தனை செய்­த­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம்  நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தது.அந்த நீர்­மூழ்கிக் கப்­பலை கிம் யொங் உன் பரி­சோ­தனை செய்யும்போது  அவ­ரது உத்­தி­யோ­கத்­தர்கள் அவ­ர­ருகே நடந்து சென்று  அவரால் வழங்­க­ப்­பட்ட குறிப்­பு­களை எழு­து­வதில் ஈடு­பட்­டனர்.

கிம் யொங் உன்னின் விசேட மேற்­பார்­வையின் கீழ்  நிர்­மா­ணிக்­கப்­பட்ட  அந்த நீர்­மூழ்கிக் கப்பல்  ஜப்­பா­னிய கடல் என அழைக்­கப்­படும் கிழக்கு கடலில் செயற்­ப­ட­வுள்­ள­தாக  வடகொரிய அர­சாங்க ஊட­க­மான கே.சிஎன்.ஏ. தெரி­விக்­கி­றது.

ஆனால் அந்த நீர்­மூழ்கிக் கப்­பலில் எத்­த­கைய ஆயு­தங்கள் உள்­ளன என்­பது தொடர் பில் அந்த ஊடகம் விபரம் எத­னையும் வெளியி­ட­வில்லை.

இதன்­போது கிம் யொங் உன்  மேற்­படி நீர்­மூழ்கிக் கப்பல் அமைக்­கப்­பட்­டுள்ள விதம்  குறித்து  பெரும் திருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக  கூறப்­ப­டு­கி­றது.

கிழக்கு மற்­றும் மேற்குப் பிராந்­தி­யங்கள்  கடலால் சூழப்­பட்ட நிலை­யி­லுள்ள  நாடு என்ற வகையில் தேசிய பாது­காப்பில்   செயற்­ பாட்டுத் திறனும் நீர் மூழ்கிக் கப்­பல்­களும் முக்­கி­யத்­துவம் வகிப்­ப­தாக கிம் யொங் உன் தெரி­வித்தார்.

வடகொரி­யா­வா­னது  நீர்­மூழ்கிக் கப்­பல் கள் உள்ளடங்கலான கடற்படை  ஆயுத வசதிகளை அபிவிருத்தி செய்வதில் தொட ர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி யுள்ளதாக  அவர் மேலும் கூறினார்.