புகலிடக்கோரிக்கையாளர்களை மீளக்குடியமர்த்த அவுஸ்திரேலியாவுக்கு வலியுறுத்தல்!

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு விஜயம் செய்­துள்ள பபுவா நியூ­கி­னியின் பிர­தமர் ஜேம்ஸ் மராபி தனது நாட்டின் மனுஸ் தீவில் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்ள  புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்­களை மீளக்குடி­ய­மர்த்த காலவரை­ய­றை­யொன்றை நிர்ணயிக்க அவுஸ்­தி­ரே­லிய அதி­கா­ரி­க­ளுக்கு நேற்று வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

 

மராபி இரு மாதங்­க­ளுக்கு முன்னர் பிர­த­ம­ராக பத­வி­யேற்ற பின்னர் வெளி­நாடு ஒன்­றுக்கு விஜயம் செய்­வது இதுவே முதல் தட­வை­யாகும்.

அவர்  அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்­கான இந்த விஜ­யத்தின்போது அந்­நாட்டு பிர­தமர் ஸ்கொட் மொரிஸன் எதிர்க்­கட்சித் தலைவர் அந்­தோனி அல்பானிஸ் மற்றும் உயர்­மட்ட அதி­கா­ரி­க­ளுடன் சந்­திப்பை மேற்­கொண்டார்.

அவுஸ்­தி­ரே­லி­யா­வா­னது தனது நாட்­டுக்கு சட்­ட­வி­ரோ­த­மாக வரும் புக­லி­டக்­கோரிக் ­கை­யா­ளர்கள் அனை­வ­ரையும் மனுஸ் மற்றும் நவுறு தீவுக்கு அனுப்பும் நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு வரு­கின்­றது. அந்தக் கொள்கை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட ஆறா­வது ஆண்டு தினம் கடந்த வெள் ளிக்­கி­ழ­மை­யாகும்.

இந்­நி­லையில் இத­னை­யொட்டி நேற்று முன்­தினம் ஞாயிற்றுக்­கி­ழமை மற்றும் அத ற்கு முதல் நாளான சனிக்­கி­ழமை ஆகிய தினங்­களில் அவுஸ்­தி­ரே­லி­யா­வெங்கும் எதி ர்ப்பு ஆர்ப்­பாட்ட ஊர்­வ­லங்கள் நடத்­தப்­பட்­டன.

பபுவா நியூ­கி­னி­யி­லுள்ள புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்­களில் பலர் மீளக்­கு­டி­ய­மர்த்­தப்­பட்­டுள்ள நிலையில் சுமார் 450 புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்கள் தொடர்ந்து அங்கு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அங் ­குள்ள மோச­மான நிலைமைகள் காரண மாக அவர்கள் தற்கொலை செய்வதற்கு முயற்சித்து வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் மேலும் 350 புகலிடக்கோரிக்கையாளர்கள் நவுறு தீவில் உள்ளனர்.