சினிமா அரசியலுக்கு வருவதற்கான பயிற்சி மையம் இல்லை என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். களவாணி-2 படத்தில் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக ஓவியா நடித்துள்ளார்.
படம் வெற்றி பெற்ற உற்சாகத்தில் அவர் அளித்த பேட்டி:
மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக நடித்தது அரசியலுக்கு வருவதற்கான பயிற்சியா?
சினிமாவை என்ன அரசியலுக்கு வருவதற்கான பயிற்சி மையம்ன்னு நினைக்கிறீங்களா? தமிழ்நாட்டுல மட்டும்தான் இந்த நிலைமை இருக்கு. சினிமால கொஞ்சம் பிரபலமானா உடனே அரசியலுக்கு வர்றது. எனக்கு அப்படி எந்த திட்டமும் கிடையாது. ஓவியா ஆர்மியை நான் சுயலாபத்துக்காக பயன்படுத்திக்கொள்ள மாட்டேன். எதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் வருவேன்.
அரசியலுக்கு வந்தால் கேரள அரசியலில் நுழைவீர்களா?
ஒரே மாதிரியான படங்களில், கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் இல்லை. ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டவேண்டும். 90 எம்.எல்., காஞ்சனா, களவாணி 2 இந்த 3 படங்களுக்கும் ஏதாவது ஒற்றுமை இருந்ததா? அடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடிக்கிறேன். மலையாள படம் ஒன்றும் தயாராகி விட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எல்லோரும் உங்களை காப்பியடிக்க முயற்சிக்கிறார்களே?
நான் கலந்துகொண்டது பிக்பாஸ் முதல் பாகத்தில். அப்போது எந்த ஐடியாவும் இல்லாமல் சென்றேன். வெளியில் என்ன நடந்தது என்பதுகூட எனக்கு தெரியாது. எனக்கு என்ன தோன்றியதோ அதை செய்தேன். சுதந்திரமாக இருந்தேன்.
அதனால் மக்களுக்கு பிடித்து போனது. இப்போது அப்படி இல்லை. என்னை காப்பி அடிக்க முயற்சி செய்கிறார்கள். அதற்கு பதிலாக இயல்பாக இருந்தாலே போதும். எனக்கு எதிரிகளோ நண்பர்களோ கிடையாது. எதிரி என்று யார் இருந்தாலும் உடனே நண்பராக்கி கொள்வேன்.
Eelamurasu Australia Online News Portal