மரண தண்­ட­னையை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு இலங்­கை­யர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் !

மர­ண­தண்­ட­னையை முற்­றாக இல்­லா­தொ­ழித்­தி­ருப்­ப­தற்குத் தீர்­மா­னித்­தி­ருக்கும் பல்­வேறு சர்­வ­தேச நாடு­களின் மத்­தியில் இலங்­கையும் ஒரு அங்­க­மாகும் என்ற அடிப்­ப­டையில், அதனை மீண்டும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வது என்­பது மிக முக்­கிய பிரச்­சி­னை­யாகும்.

எனவே மிகவும் குரூ­ர­மா­னதும், இழி­வா­ன­து­மான மர­ண­தண்­ட­னையை முற்­றாக இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு இலங்­கை­யர்கள் அனை­வரும் உறு­தி­பூ­ணு­வ­துடன், அதற்­காக ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும் என்று மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலை­யத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து அழைப்பு விடுத்­துள்ளார்.

மரண தண்­ட­னையை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு இலங்­கை­யர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் என்று வலி­யு­றுத்தி மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலை­யத்தின் டுவிட்டர் பக்­கத்தில் நேற்று வெளி­யி­டப்­பட்­டுள்ள காணொளி ஒன்றின் ஊடா­கவே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.