மாண­வர்கள் கடத்­தப்­பட்­டமையை அறிந்திருந்தேன்!

தெஹி­வ­ளையில் 5 மாண­வர்கள் கடத்­தப்­பட்டு, கிழக்கு கடற்­படை தலை­மை­ய­கத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­ததை அறிந்­தி­ருந்தார் என்­பதை முன்னாள் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் வசந்த கரன்­ன­கொட குற்ற விசா­ரணைப் பிரி­விடம் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

கொழும்பு பகு­தியில் கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட 11 பேர் குறித்து விசா­ரித்து வரும் குற்ற விசா­ரணைப் பிரிவு கோட்டை நீதிவான் நீதி­மன்­றத்தில் அளித்­துள்ள ‘பி’ அறிக்­கை­யி­லேயே இந்த தகவல் கூறப்­பட்­டுள்­ளது.

தமது விசா­ர­ணை­களின்போதே தெஹி­வ­ளையில் 5 மாண­வர்கள் கடத்­தப்­பட்டு, கிழக்கு கடற்­படை தலை­மை­ய­கத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­ததை அறிந்­தி­ருந்தார் என்­பதை அட்­மிரல் வசந்த கரன்­ன­கொட ஒப்­புக்­கொண்டார் என்று அந்த அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.

அத்­துடன்,  கடத்­தப்­பட்ட இளை­ஞர்­களைப் பற்றி முதன்­மு­தலில் 2009 மே 10ஆம் திகதி அறி­விக்­கப்­பட்ட போதும் கிழக்கு கடற்­படைத் தலை­மை­ய­கத்தில் இருந்த இளை­ஞர்­களை விடு­விப்­ப­தற்கு எந்த நட­வ­டிக்­கை­யையும் எடுப்­ப­தற்கு அட்­மிரல் கரன்­ன­கொட தவ­றி­விட்டார்  என்றும் குற்ற விசா­ரணைப் பிரி­வினர் கூறி­யுள்­ளனர்.

அவர் ஐந்து மாண­வர்கள் கடத்­தப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த  தக­வல்கள் குறித்து சரி­யாக கவ­னத்தில் எடுத்து செயற்­பட்­டி­ருந்தால் அந்த மாண­வர்கள் மற்றும் பல­வந்­த­மாக கடத்­தப்­பட்ட ஏனை­ய­வர்­க­ளையும் பாது­காத்­தி­ருக்க முடியும் என்றும் அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த மாண­வர்கள் தொடர்­பாக கடற்­படைப் புல­னாய்வு பணிப்­பாளர் றியர் அட்­மிரல் ஏ.கே.குருகே வழங்­கிய முக்­கி­ய­மான ஆதாரம் தொடர்­பாக, 2009 மே 28ஆம்  திகதி குற்றப் பிரிவு பிரதி  பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்­க­விடம் அளித்த முறைப்­பாட்டில் குறிப்­பிடத் தவ­றி­யது குறித்தும் அட்­மிரல் கரன்­ன­கொட மீது குற்­றச்­சாட்டு கூறப்­பட்­டுள்­ளது.

இதன் மூலம், குற்­றங்கள் தொடர்­பான ஆதாரங்களை மறைத்து குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைப் பாதுகாக்க அவர் முனைந்துள்ளார் என்று இப்போது தெரியவந்துள்ளது என குற்ற விசாரணைப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.