ஹேமசிறி, பூஜித்தவுக்கு நாளை வரை விளக்கமறியல்!

குற்றப்புலனாய்வுபிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள  காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுபிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள  காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை  தடுப்­ப­தற்கு அல்­லது அதன் தாக்­கங்­களை குறைத்­துக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­காமை தொடர்பில் குற்­றஞ்­சாட்­டப்­பட்டு இவர்கள் இருவரிடும் குறித்த விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக பெற இன்று காலை 10 மணிக்குசி.ஐ.டி தலை­மை­ய­கத்­துக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்தனர்.

எனினும் இவர்கள் சமூ­க­ம­ளிக்­காமல் சுக­யீனம் கார­ண­மாக வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்­சை­க­ளுக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

ஹேம­சிறி பெர்­னாண்டோ இரு­தய கோளாறு கார­ண­மாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் இரு­தய சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­த­துடன், காய்ச்­ச­லுடன் கூடிய திடீர் சுக­யீனம் கார­ண­மாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர  நார­ஹேன்­பிட்­டியில் உள்ள காவல் துறை  வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார்.

அந்­தந்த வைத்­தி­ய­சா­லை­களில் அவர்­க­ளுக்கு  சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வந்த நிலை­யி­லேயே, இன்று பிற்­பகல்  வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு சென்ற சி.ஐ.டி.யின் காவல் துறை  அத்­தி­யட்சர் ஒரு­வரின் மேற்­பார்­வையின் கீழான இரு சிறப்புக் குழுக்கள் அவர்­க­ளிடம் வாக்கு மூலம்  பதிவுச் செய்­து­கொண்ட பின்னர், அவர்­களைக் கைது செய்­தனர்.

இந் நிலையில் கைது செய்­யப்­பட்ட இரு­வரும், சி.ஐ.டி.யினரின் பாது­காப்பின் கீழ்  வைத்­தி­ய­சா­லை­க­ளி­லேயே தொடர்ந்து  சிகிச்சைப் பெற்று வரு­வ­தாக பொலிஸ் பேச்­சாளர் காவல் துறை அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இந்த கைதுகள் குறித்து சி.ஐ.டி.யின் உதவி காவல் துறை  அத்­தி­யட்சர்  ஒரு­வரின் கீழான அதி­கா­ரிகள், கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு மாலை அறிக்கை சமர்ப்­பித்த நிலையில்,  மாலை வேளையில்  கொழும்பு பிர­தான நீதிவான் லங்க ஜய­ரத்ன கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கும், நார­ஹேன்­பிட்டி காவல் துறை வைத்­தி­ய­சா­லைக்கும் சென்று சந்­தேக நபர்­களைப் பார்­வை­யிட்டதுடன் நாளை வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை  தடுப்­ப­தற்கு அல்­லது அதன் தாக்­கங்­களை குறைத்­துக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­காமை தொடர்பில் குற்­றஞ்­சாட்­டப்­பட்டு இவர்கள் இருவரிடும் குறித்த விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக பெற இன்று காலை 10 மணிக்குசி.ஐ.டி தலை­மை­ய­கத்­துக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்தனர்.

எனினும் இவர்கள் சமூ­க­ம­ளிக்­காமல் சுக­யீனம் கார­ண­மாக வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்­சை­க­ளுக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

ஹேம­சிறி பெர்­னாண்டோ இரு­தய கோளாறு கார­ண­மாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் இரு­தய சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­த­துடன், காய்ச்­ச­லுடன் கூடிய திடீர் சுக­யீனம் கார­ண­மாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர  நார­ஹேன்­பிட்­டியில் உள்ள காவல் துறை  வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார்.

அந்­தந்த வைத்­தி­ய­சா­லை­களில் அவர்­க­ளுக்கு  சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வந்த நிலை­யி­லேயே, இன்று பிற்­பகல்  வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு சென்ற சி.ஐ.டி.யின் காவல் துறை  அத்­தி­யட்சர் ஒரு­வரின் மேற்­பார்­வையின் கீழான இரு சிறப்புக் குழுக்கள் அவர்­க­ளிடம் வாக்கு மூலம்  பதிவுச் செய்­து­கொண்ட பின்னர், அவர்­களைக் கைது செய்­தனர்.

இந் நிலையில் கைது செய்­யப்­பட்ட இரு­வரும், சி.ஐ.டி.யினரின் பாது­காப்பின் கீழ்  வைத்­தி­ய­சா­லை­க­ளி­லேயே தொடர்ந்து  சிகிச்சைப் பெற்று வரு­வ­தாக பொலிஸ் பேச்­சாளர் காவல் துறை அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இந்த கைதுகள் குறித்து சி.ஐ.டி.யின் உதவி காவல் துறை  அத்­தி­யட்சர்  ஒரு­வரின் கீழான அதி­கா­ரிகள், கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு மாலை அறிக்கை சமர்ப்­பித்த நிலையில்,  மாலை வேளையில்  கொழும்பு பிர­தான நீதிவான் லங்க ஜய­ரத்ன கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கும், நார­ஹேன்­பிட்டி காவல் துறை வைத்­தி­ய­சா­லைக்கும் சென்று சந்­தேக நபர்­களைப் பார்­வை­யிட்டதுடன் நாளை வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.