அவுஸ்திரேலியா- தீவிபத்து! இரட்டை சகோதாரிகள் உட்பட 3 பேர் பலி!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீ பரவியமையினால் 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு ஐந்து வயதான சகோதரிகள் இருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர்.

இந்த தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவர்களில் இருவர் இரட்டை சகோதரிகள் என தெரியவந்துள்ளது.

அதேநேரம் தீப்பரவலில் காயமடைந்த நிலையில் 8 வயதான சிறுமி ஒருவரும் 31 வயதான பெண் ஒருவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.