பாலியல் வல்லுறவை காரணம் காண்பித்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் பெண்கள்!

நவுறு தீவிலுள்ள பெண்கள் பாலியல் வல்லுறவு மற்றும் கருக்கலைப்பு ஆகியவற்றை காரணம் காண்பித்து அவுதிரேலியாவுக்கு வருவதற்கு முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்துறை அமைச்சர் Peter Dutton இதனை தெரிவித்துள்ளார்.

மனுஸ் மற்றும் நவுறு தீவிலுள்ள அகதிகளை மருத்துவ காரணங்களுக்காக அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவருவதற்கு வகை செய்யும் சட்டத்தை மாற்றுவதற்காக லிபரல் அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட Peter Dutton, இதனை குறிப்பிட்டுள்ளார்.

“மருத்துவ காரணங்களுக்காக அவுஸ்திரேலியாவுக்கு வரமுடியும் என்ற சட்டம் நடைமுறையிலிருக்கும்வரையில் அந்த சட்டத்திற்குள்ளேயும் அதைச்சுற்றியும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மனுஸ் – நவுறு அகதிகள், அவுஸ்திரேலியாவுக்குள் வந்துவிடுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.

நவுறுவில் தாங்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதனால் உருவான கருவை கலைக்க விரும்புவதாகவும் கூறி, அவுஸ்திரேலியாவுக்கு வருகின்ற பெண்கள் அவுஸ்திரேலியா வந்த உடனேயே இங்கு தஞ்சம் கோரி வழக்குத்தாக்கல் செய்துவிட்டு, கருவை கலைப்பதற்கு விருப்பமில்லை என்று கூறிவிடுகிறார்கள்.

இதனால், நவுறுக்கு திரும்பிச்செல்லாது அவுஸ்திரேலியாவிலேயே தங்கிவிடுவதற்கான காரியங்களை மேற்கொண்டுவிடுகிறார்கள்” என Peter Dutton தெரிவித்துள்ளார்.