அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு! நால்வர் பலி!

அவுஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

அவுஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் ஐரோப்பியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இது தீவிரவாத தாக்குதல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.