நேச­ம­ணியும், நரேந்­திர மோடியும்..!

புறக்­க­ணித்தல் வலி தரும். ஒரு­வரை முற்­று­மு­ழு­தாக விரும்­பா­தி­ருத்­தலை விடவும் அவரை வேறு­ப­டுத்திப் பார்ப்­பதும், புறக்­க­ணிப்­பதும் ஆகக்­கூ­டு­த­லான சேதத்தை ஏற்­ப­டுத்தும் என்பார், எழுத்­தாளர் ஜே.கே.ரோவ்லிங்ஸ்.

உலகின் மிகப்­பெ­ரிய ஜன­நா­யக தேசத்தில், வடக்­கத்­தி­யர்­களால் நீண்­ட­கா­ல­மாக மத­ரா­ஸிகள் என்று புறக்­க­ணிக்­கப்­பட்டு வேறு­ப­டுத்­தப்­பட்ட தமி­ழர்கள். இந்த மக்கள் புறக்­க­ணிப்பை புறக்­க­ணித்­தி­ருப்­பதன் மூலம் அர­சியல் ரீதி­யான பதி­லடி கொடுத்­தி­ருக்­கி­றார்கள்.

லோக் சபா தேர்­தலில் வாக்­குகள் மூலம் பார­திய ஜனதா கட்­சியை நிரா­க­ரித்­ததன் மூலம் ஜன­நா­யக ரீதியில் பதி­லடி கொடுத்த தமி­ழர்கள், சர்­வ­தேச தகவல் வலைப்­பின்­னலில் நேச­மணி மீதான நேசிப்பின் மூலம் நரேந்­திர மோடியை நிரா­க­ரித்­தி­ருக்­கி­றார்கள்.

கடந்த 23ஆம் திகதி வெளி­யான தமி­ழக லோக் சபா தேர்தல் பெறு­பே­றுகள் தந்த அதிர்ச்­சியில் இருந்து நரேந்­திர மோடி மீண்­டி­ருக்க மாட்டார். அந்­நேரம் கடந்த 30ஆம் திகதி இரண்­டா­வது பதவிக் காலத்­திற்­காக சத்­தியப் பிர­மாணம் செய்த சம­யத்தில் நேச­மணி என்ற கற்­பனை பாத்­தி­ரத்­திற்கு அளிக்­கப்­பட்ட முக்­கி­யத்­து­வம் அவ­ருக்கு இடி­யாக விழுந்­தி­ருக்கும்.

முதல் விட­யத்தைப் பற்றிப் பேசுவோம். லோக் சபா தேர்­தலில் மோடியின் காவி அலை இந்­தி­யாவின் வட­ப­குதி முழு­வதும் தீவி­ர­மாகப் பரவி பீஜேபி கூட்­டணி 543 இல் 353 தொகு­தி­களில் வெற்­றி­யீட்­டி­யது. ஆனால், தமி­ழ­கத்தின் 38 தொகு­தி­களில் ஒன்­றி­லேனும் வெற்றி பெற முடி­ய­வில்லை. இது தம்மைப் புறக்­க­ணித்­த­தாகக் கருதும் நரேந்­திர மோடிக்கு தமி­ழக மக்கள் கொடுத்த முதல் அதிர்ச்சி வைத்­தியம்.

இனி இரண்­டா­வது விடயம். ஆரம்பம் தொடக்கம் பிர­தமர் நரேந்­திர மோடி தமது பிர­சா­ரத்தை மையப்­ப­டுத்­திய பிர­தான ஊட­க­மாக ட்விற்றர் திகழ்ந்­தது. பாகிஸ்­தா­னி­யர்கள் ‘ட்விற்றர் மோடி’ என்று கேலி பண்ணும் அள­விற்கு பிர­தமர் ட்விற்­றரில் நாட்டம் கொண்­ட­வ­ராக இருந்தார். இந்த சமூக ஊட­கத்தில் பிர­தமர் ஏதேனும் கருத்தை இட்டால், அதனைப் பார்ப்­ப­வர்­களின் எண்­ணிக்கை ஐந்து கோடியை எட்­டு­கி­றது. ஆனால், அவர் சத்­தியப் பிர­மாணம் செய்த தினத்­தன்று, மோடியை விடவும் நேச­ம­ணிக்கே அதிக முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஒரு தலை­வ­ரையோ, அவ­ரது கோட்­பா­டு­க­ளையோ வாக்­கா­ளர்கள் வாக்­குகள் மூலம் நிரா­க­ரித்தல் என்­பது ஜன­நா­ய­கத்தின் அடிப்­படை அம்சம். அதனைப் புரிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும். இந்­தி­யாவின் எதிர்­காலத் தலை­வி­தியைத் தீர்­மா­னிக்­கக்­கூ­டிய தினத்­தன்று, தேசிய அர­சியல் பற்றி எது­வித அக்­க­றையும் இல்­லாமல் நேச­ம­ணியை நேசித்­ததன் மூலம் தமது புறக்­க­ணிப்பை வெளிப்­ப­டுத்­து­தலின் சூட்­சு­மத்தைப் புரிந்து கொள்­வது சற்றுக் கடி­ன­மான விஷயம். அதற்கு ட்விற்றர் பற்றி சற்று அறிந்­தி­ருக்க வேண்டும்.

ட்விற்றர் என்­பது பேஸ்புக் போன்­ற­தொரு சமூக வலை­த்தளம். அதில் அங்­கத்­துவம் பெறும் பய­னர்கள், சில எல்­லை­க­ளுக்கு உட்­பட்டு தாம் விரும்பும் விட­யங்­களைப் பகிர்ந்து கொள்ள முடியும். அது எழுத்து வடிவ கருத்­தாக, பட­மாக, காணொ­ளி­யாக, இணைய சுட்­டி­யாக இருக்­கலாம். இது ட்வீற் எனப்­படும். ஒரு பய­னரை இன்­னொரு பயனர் பின்­தொ­ட­ரலாம். இவர்கள் ஃபலோவர்ஸ் (Followers) எனப்­ப­டு­வார்கள். முதற்­ப­யனர் இடும் பதி­வு­களை இரண்­டா­வது பயனர் பார்க்க முடியும். இதன் பிர­காரம், நரேந்­திர மோடிக்கு 47 மில்­லி­ய­னுக்கு மேலான ஃபலோவர்ஸ் உள்­ளார்கள். அரச கொள்­கைகள் முதற்­கொண்டு தாம் விரும்பி உண்ட உணவு வரை­யி­லான பல விட­யங்­க­ளையும் இந்­தியப் பிர­தமர் ட்வீற் செய்­வது வழக்கம். இதுவே இவரை ட்விற்றர் மோடி என்று வர்­ணிக்க வழி­வ­குத்­தது.

ட்விற்­றரில் இன்­னொரு சிறப்­பம்சம் உண்டு. அது ஹாஷ்டெக் எனப்­ப­டு­வ­தாகும். இது ஆங்­கில விசைப்­ப­ல­கை­யி­லுள்ள ‘#’  என்ற குறி­யீட்டின் பெய­ராகும். ஒரு பயனர் ஹேஷ் டெக்கை சேர்த்து ஒரு விட­யத்தைப் பதி­வி­டலாம். இன்­னொ­ரு­வரும் ஹேஷ்டெக்­குடன் அதே கருத்தைப் பதி­வி­டு­கையில், அந்த விடயம் கவ­னிக்­கப்­ப­டு­கி­றது. ஒரு விடயம் ஆகக்­கூ­டு­த­லான பய­னர்­களால் பகி­ரப்­ப­டு­கையில், அது ட்விற்றர் சமூக ஊட­கத்தில் மேலோங்­கிய விட­ய­மா­கி­றது. இது ட்ரென்டிங் எனப்­ப­டு­கி­றது.

தேர்­த­லுக்கு முன்­ன­தாக, நரேந்­திர மோடி #MainBhiChowkidaar என்ற ஹேஷ்­டெக்­குடன் தமது கருத்­துக்­களைப் பதிவு செய்தார். இதன் அர்த்தம் நானும் காவ­லாளி என்­ப­தாகும். இந்­தி­யாவில் நிகழும் ஊழல்­களைப் பார்த்துக் கொண்­டி­ருப்­ப­தா­கவும், ஊழலில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் ஊழலை எதிர்த்துப் போரா­டு­வோ­ராக தம்மை சித்­த­ரித்துக் கொள்ள முனையக் கூடாது என்ற கருத்தைப் பரப்­பு­வது அவ­ரது நோக்கம். இது காங்­கிரஸ் தலை­வர்­களை இலக்கு வைத்த பிர­சா­ர­மாகும். இந்த ஹேஷ்டெக் உலக அளவில் ட்ரென்டிங் ஆனது. இதன்­மூலம், தேர்தல் வாக்­கெ­டுப்­பிற்கு முன்­ன­தா­கவே இணைய உலகில் வெற்றி பெற்ற மிதப்பில் நரேந்­திர மோடி செயற்­பட்டார்.

இனி நேச­மணி விவ­கா­ரத்­திற்கு வருவோம். இது #Pray_For_Nesamani என்ற ஹேஷ்­டெக்­குடன் தொடர்­பு­டை­ய­தாகும். ஒரு பொறி­யி­ய­லாளர் சுத்­தியல் பற்றி விளக்கம் அளிப்­ப­தற்­காக பதிவு செய்த கருத்து, இதன் மூலா­ரம்­ப­மாகத் திகழ்­கி­றது. ஒரு பயனர் சுத்­தி­ய­லுக்கு உங்கள் நாட்டில் என்ன பெயர் என்ற கேள்­வியை இட்­டி­ருந்தார். மற்­றொ­ருவர், நகைச்­சு­வை­யாக பதில் பதிவை இட்­டி­ருந்தார். இதனை தட்­டினால் நங், நங்­ஙென்று சத்தம் வரும். ஒரு பெயின்ட் வேலை செய்யும் நேச­ம­ணியின் தலையும் சுத்­தி­யலால் உடைந்­தது என்று அவ­ரது பதிலில் எழு­தப்­பட்­டி­ருந்­தது. இதனைக் கண்ட இன்­னொரு பதி­வாளர், நகைச்­சுவை உணர்­வுடன் நேச­மணி நல­மாக இருக்­கி­றாரா என்று ட்வீற் செய்தார். இதன் தொடர்ச்­சி­யாக, நேச­ம­ணிக்­காக பிரார்த்­திப்போம் என்ற கோரிக்­கை­யுடன் #Pray_For_Nesamani என்ற ஹேஷ்டெக் பிர­பலம் பெற்­றது. உலக அளவில் ட்ரென்ட்டிங் ஆனது.

இதில் நேச­மணி உண்­மை­யான நபர் அல்லர். 2001ஆம் ஆண்டு வெளி­யான நண்­பர்கள் படத்தில் வடி­வேலு ஏற்று நடித்த பாத்­தி­ரத்தின் பெயர் தான் அது. இதில் வரும் நகைச்­சுவைக் காட்­சியில், மேலே­யி­ருந்து விழும் சுத்­தியல் வடி­வே­லுவின் தலையில் விழும் காட்சி மிகவும் தத்­ரூ­ப­மாக பதிவு செய்­யப்­பட்­டி­ருக்கும். இந்த நேச­மணி என்ற கற்­பனைக் கதா­பாத்­தி­ரத்­திற்கு ட்விற்­றரில் உருவம் கொடுத்து, ட்விற்றர் பய­னர்கள் சகல விட­யங்­க­ளையும் கேலி செய்யத் தொடங்­கி­னார்கள். இந்தக் கேலியில் பாப்­ப­ர­சரும் தப்­ப­வில்லை. பாப்­ப­ர­சரின் படத்­துடன், நேச­மணி குண­ம­டைய வேண்டும் என கத்­தோ­லிக்கத் திருத்­தந்தை பிரார்த்­தனை என்று குறும்­பர்கள் ட்வீற் செய்­தி­ருந்­தார்கள்.

இந்த ஹேஷ்டெக் ட்ரென்டிங் ஆன­தற்கு இந்­தியத் தமி­ழர்­களின் நகைச்­சுவை உணர்வு பிர­தான காரணம் என்று கூறலாம். இது ட்ரென்ட் ஆன சம­யத்தில், தமி­ழர்கள் பிர­த­மரின் சத்­தியப் பிர­மாணம் பற்றி அக்­கறை காட்­ட­வில்லை. பீ.ஜே.பி. அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை பற்றி கவ­லைப்­ப­ட­வில்லை. சுஷ்மா ஸ்வராஜ்­ஜிற்கு அமைச்சுப் பதவி கிடைக்­கா­த­தையும் பொருட்­ப­டுத்­த­வில்லை. அவர்கள் நேச­மணி என்ற கதா­பாத்­தி­ரத்தை வைத்து யாரை­யெல்லாம் கலாய்க்­கலாம் என்­பதில் குறி­யாக இருந்­தார்கள். மத்­திய அர­சாங்கம் எக்­கேடு கெட்டுப் போனாலும் எமக்­கென்ன என்ற தொனி­யுடன், சிரித்து மாள்­வதில் தமி­ழர்­களின் கவனம் குவிந்­தி­ருந்­தது.

இது­வொன்றும் இலே­சுப்­பட்ட விடயம் அல்ல. இது இந்­தி­யர்கள் என்ற பொது அடை­யா­ளத்தைக் கேள்­விக்கு உட்­ப­டுத்தும் விஷ­ய­மாகும். இதில், வட இந்­தி­யர்­களின் அர­சியல் தான் தேசப்­பற்று என்றால், அந்தத் தேசப்­பற்று எமக்கு எதற்கு என்ற கேள்­வியின் தீவி­ரத்தை மறை­மு­க­மாக உணர முடியும். தமி­ழர்­களால் தேர்­தலில் பீ.ஜே.பி நிரா­க­ரிக்­கப்­பட்ட விதம் வேறு. ட்விற்­றரில் நரேந்­திர மோடி புறக்­க­ணிக்­கப்­பட்ட விதமும் வித்­தி­யா­ச­மா­னது. இருந்­த­போ­திலும், இரண்­டுக்­கு­மான கார­ணங்கள் பொது­வா­னவை. இவை ஆண்­டாண்டு காலம் நீடிப்­பவை. விரும்­பா­தி­ருத்­த­லையும், புறக்­க­ணித்­த­லையும் அடித்­த­ள­மாகக் கொண்­டவை.

அகில இந்­திய ரீதியில், மோடிக்கும் பார­திய ஜனதா கட்­சிக்கும் கிடைத்த வெற்­றிக்கு பல கார­ணங்கள் கூறப்­ப­டு­கின்­றன. பார­திய ஜனதா கட்சி முன்­னி­றுத்­திய தேசி­ய­வாதம், எதிர்க்­கட்­சியின் பல­வீ­னங்கள், சாதிய அர­சி­யலின் தோல்வி, இந்­துத்­துவ பெருமை போன்ற கார­ணங்கள். நரேந்­திர மோடி என்ற ஆளுமை கொண்­டுள்ள ஆட்­க­வர்ச்சி முதன்மைக் கார­ண­மாக நோக்­கப்­ப­டு­கி­றது. தாம் சிறந்த தலைவன் என்ற நம்­பிக்­கையை மக்கள் மத்­தியில் விதைக்கச் செய்­வதில் மோடி வெற்றி பெற்றார் என்­பது அர­சியல் ஆய்­வா­ளர்­களின் கருத்து.

இந்த வெற்றி தமி­ழ­கத்தில் சாத்­தி­யப்­ப­டாமல் போனது ஏன்? இதற்கும் பல கார­ணங்கள் உண்டு. முதன்மைக் காரணம், புறக்­க­ணிப்பின் வலி. வர­லாற்று காலம் தொடக்கம் வட இந்­தி­யர்­க­ளாலும், சமீ­பத்­திய கால­மாக நரேந்­திர மோடி­யாலும் புறக்­க­ணிக்­கப்­பட்­டதன் வலி, வாக்­கு­களின் ஊடா­கவும், ட்வீற்­றுக்­களின் ஊடா­கவும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்­பதே உண்மை.

வடக்கின் தலை­வர்கள் தமி­ழ­கத்தை மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யுடன் நடத்­து­கி­றார்கள் என்ற எண்ணம் தமி­ழர்கள் மனதில் இன்று நேற்று தோன்­றி­யது அல்ல. இது ஆரி­யர்­களின் ஆதிக்க மனப்­பான்­மையை வெறுக்கத் தொடங்­கிய நாள் தொடக்கம் திரா­விடத் தமி­ழர்கள் மனதில் நீடிப்­ப­தாகும்.

இந்த எண்ணம், அரச பாட­சா­லை­களில் ஹிந்தி மொழிப் போத­னையைக் கட்­டா­ய­மாக்­கு­வ­தற்கு இந்தி­யாவின் மத்­திய அரசு முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கை­க­ளுடன் தீவிரம் பெற்­றது எனலாம். இந்­தியா சுதந்­திரம் பெறு­வ­தற்கு முன்­ன­தாக, தமி­ழ­கத்தில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்­டங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன.

இந்தப் போராட்டம் 1960களின் முற்­ப­கு­தியில் மத்­திய அர­சாங்­கத்­திற்கு எதி­ரான மாபெரும் போராட்­ட­மாக பரி­ண­மித்­தது. ஹிந்­தியை உத்­தி­யோ­க­பூர்வ மொழி­யாக அங்கீ­க­ரிக்கும் சட்­டத்­தி­ருத்தம் போராட்­டத்­திற்கு கார­ண­மாகும். போராட்­டத்தை முன்­னின்று வழி­ந­டத்­திய பேர­றிஞர் அண்­ணாத்­துரை உள்­ளிட்ட தி.மு.க. பிர­மு­கர்கள் கைது செய்­யப்­பட்­டார்கள்

புது­டெல்லி மீது தமி­ழர்கள் கொண்ட சந்­தேகம் சமீபத்­திய காலத்தில் மென்­மேலும்  வலுப்­பெற்­றன. தமி­ழ­கத்தில் திரா­விட அர­சியல் செய்த மு.கரு­ணா­நிதி, ஜெய­ல­லிதா ஜெயராம் ஆகி­யோரின் மறைவைத் தொடர்ந்து, தமி­ழ­கத்தில் அர­சியல் வெற்­றிடம் ஏற்­பட்­ட­தாகக் கருதி, அதற்­குள் பார­திய கட்சி நுழைய முயன்றது என்ற எண்­ணம் தமி­ழக மக்கள் மனதில் உள்­ளது.

இது தவிர, ஆரி­யர்­களின் ஆதிக்க மனப்­பான்­மை­யுடன் தமி­ழர்­களின் கலா­சா­ரத்தை ஒடுக்கி தமி­ழி­னத்தின் இருப்பை கேள்­விக்கு உட்­ப­டுத்த மோடி முனை­கிறார் என்ற சந்­தே­கமும் உள்­ளது. இந்த சந்­தே­கமே மெரீனா கடற்­க­ரையில் ஜல்­லிக்­கட்டு எதிர்ப்பு போராட்­ட­மாக வெடித்­தது. அர­சியல் தலை­மைகள் இல்­லாத நிலையில் தீவி­ர­மாக வெடித்த ஜல்­லிக்­கட்டுப் போராட்­டத்தின் வீரியம் வடக்கைத் திரும்பிப் பார்க்கச் செய்­தது. இந்த விளை­யாட்டின் மீதான தடை நீக்­கப்­பட்­டது. இதன்­போது, நரேந்­திர மோடி தமிழ் எதிர்ப்­பா­ள­ரா­கவும், தமி­ழக எதிர்ப்­பா­ள­ரா­கவும் சித்­த­ரிப்­பதில் தி.மு.க தலை­வர்கள் ஸ்டாலின் முத­லா­ன­வர்கள் வெற்றி பெற்­றார்கள்.

மோடி மீதான எதிர்ப்­பலை தீவிரம் பெறு­வ­தற்கு இன்னும் பல கார­ணங்கள். சரி­யாக ஒரு வரு­டத்­திற்கு முன்னர் தூத்­துக்­குடி ஸ்டெர்லைட் போராட்­டத்தை அரச படைகள் ஒடுக்­கிய விதத்தை மக்கள் மறக்­க­வில்லை. இங்­குள்ள செம்புத் தொழிற்­சா­லையால் தமது உயி­ருக்கு ஆபத்து. இதனை நிறுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்­பதே மக்­களின் மூலா­தா­ர­மான கோரிக்கை. இந்தப் போராட்­டத்தை வன்­மு­றை­களைப் பிர­யோ­கித்தும், அர­சியல் சதி­

மு­யற்­சிகள் மூலமும் மத்­திய அர­சாங்கம் மிகவும் கொடு­மை­யான முறையில் ஒதுக்­கி­யது என்ற ஆதங்கம் தமி­ழக மக்கள் மனதில் உள்­ளது.

இங்கு கூடாங்­குளம் அணு உலை பற்­றியும் பேச வேண்டும். இந்­தி­யாவின் மின்­சார நெருக்­க­டியைத் தீர்ப்­ப­தற்கு அணு­சக்­தியைப் பயன்­ப­டுத்தி, மின்­வ­லுவை உற்­பத்தி செய்­வ­தற்­காக கூடாங்­குளம் அணு உலை நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. இதன்­மூலம் அணுக்­க­சிவு ஏற்­பட்டால் பல உயிர்கள் பலி­யா­கக்­கூடும் என்ற ஆதங்­கங்­க­ளுக்கு மத்­தியில், அணு­வா­லையை நிர்­மா­ணிக்க வடக்குத் தலை­வர்கள் தமி­ழ­கத்­தையே தெரிவு செய்­தார்கள் என்ற கோபமும், நிரா­க­ரிப்பு பற்­றிய வலியும் தமி­ழக மக்­க­ளிடம் உள்­ளது.

சமீப காலத்தில் தமி­ழ­கத்தில் மோடி மீதான வெறுப்­பு­ணர்வு தீவிரம் பெறு­வ­தற்கு பல கார­ணங்கள் இருந்­தன. கஜா புயல் கோரத்­தாண்­டவம் ஆடிய சந்­தர்ப்­ப­த்தில்  வராத மோடி, வாக்குக் கேட்­ப­தற்­காக மாத்­திரம் வந்தார் என்ற கோபத்தைக் குறிப்­பி­டலாம். ஒரு தடவை அல்ல. இரண்டு தட­வைகள் அல்ல. நான்கு மாத காலத்­திற்குள் ஆறு தட­வைகள் தமி­ழ­க­த்­தி­ற்கு வந்து, தமக்குத் தேவை­யா­ன­வர்­களை மாத்­திரம் சந்­தித்தார். விவ­சா­யி­களின் பிரச்

சி­னையைக் குறிப்­பி­டலாம்.

தமி­ழ­கத்தைச் சேர்ந்த 100 விவ­சா­யி­கள் தமது கோரிக்­கை­களை நிறை­வேற்­று­மாறு கோரி, ஜந்தர் மந்­தி­ருக்கு அருகில் நூறு நாட்கள் வரை ஆர்ப்­பாட்டம் செய்­தார்கள். ஆனால், பிர­த­மரோ, பீ.ஜே­.பி.யோ விவ­சா­யி­களைக் கண்­டு­கொள்­ள­வில்லை. குறைந்­த­பட்சம் கோரிக்­கைகள் என்­ன­வென்று கேட்­கவும் இல்­லை­யென்ற ஆதங்கம் தமி­ழக மக்கள் மனதில் உள்­ளது. தமக்கு நியா­ய­மாக கிடைக்க வேண்­டிய காவேரி தண்ணீர் விவ­கா­ரத்­திலும் மோடி அசி­ரத்தைப் போக்­குடன் நடந்து கொண்டார் என்ற கோபம் தமி­ழர்­க­ளி­டம் உள்­ளது.

இந்தத் தார்­ம்கக் கோபம் பல சந்­தர்ப்­பங்­களில் வெளிப்­ப­டை­யான முறையில் ஆர்ப்­பாட்­டங்­க­ளாக, போராட்­டங்­க­ளாக வெளிப்­பட்­டது. இணை­யத்தில்Go back modi என்ற ஹாஷ்­டாக்கின் வழியே மோடியே திரும்பிப் போ என்ற கோஷத்தின் மூலமும் வெளிப்­பட்­டது. கடந்த ஆண்டு பாது­காப்புக் கண்­காட்­சிக்­காக மோடி தமி­ழ­கத்­திற்கு சென்ற சமயம், அவருக்கு எதிராக போராட்­டத்தை ஆரம்­பித்த தமி­ழக மக்கள், அவர் தமது மண்ணில் கால்­ப­தித்த ஒவ்­வொரு தரு­ணத்­திலும் தமி­ழ­கத்தில் இருந்து விரட்­டி­ய­டிக்க முனைந்­த­தையும் நினை­வு­கூர முடியும்.

இந்­தியா என்பது மதச்சார்பின்மை கோட்பாடுகளை அனுசரித்து, பல்லினங்களையும் பல மதங்களையும் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழும் தேசம். இந்த தேசத்தில் ஜனநாயகம் என்பது உண்மையான அர்த்தமுடையதாக இருக்க வேண்டுமாயின், சகலரையும் உள்ளடக்கிக் கொண்டு முன்னேறுவது அவசியம். இதனை சகலரையும் உள்வாங்கிய ஜனநாயகம் என்போம். ஏதோவொரு காரணத்திற்காக சமூகக் கட்டமைப்பிற்குள் ஒரு மக்கள் குழுமம் விரும்பப்படாதிருக்குமாயின், வேறுபடுத்தப்படுமாயின், அல்லது புறக்கணிக்கப்படுமாயின், அங்கு ஜனநாயகம் தழைத்தோங்க முடியாது. பாதிக்கப்பட்ட மக்கள் குழுமம் சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் இருந்து விலகிச் சென்று, தம்மை அந்நியப்படுத்தும் நிலையே உருவாகும்.

நரேந்திர மோடி விவகாரத்தில் இதுவே நடந்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் தேசப்பற்றின் பெயரால் பிரதமரின் சத்தியப் பிரமாண வைபவத்தின் மீது கவனம் செலுத்திய வேளையில், தமிழ்ச் சமூகத்தின் ட்விற்றர் பயனாளிகள் கற்பனைக் கதாபாத்திரத்தின் மீது கவனத்தைத் திசைதிருப்பியிருக்கிறார்கள். இது நிராகரிப்பின் வலியையும், வேதனையையும் வெளிப்படுத்துவதற்கு தமிழ்ச்சமூகத்திற்கு கிடைத்த புதிய வடிகால் மாத்திரமே. இந்த வேதனை எதிர்காலத்தில் அரசியல் போராட்டமாக வெடிக்கலாம். அல்லது, பெரியார் சொன்னதைப் போல, தமிழகம் இந்தியாவில் இருந்து தனிநாடாகப் பிரிந்து செல்ல வழிவகுக்கவும் கூடும்.

(சதீஷ் கிருஷ்ணபிள்ளை)