அவுஸ்திரேலியாவில் 20 வருடங்களாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர் கைது

அவுஸ்திரேலியாவில் 20 வருடங்களாக பாலியல் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டு வந்த 63 வயது நபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தில் வயதான நபர் ஒருவர் தனது உறவினர் குழந்தைகள் 10 பேரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.

இதனையடுத்து அவரை கைது செய்த அவுஸ்திரேலிய பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் தனது அண்ணன், தம்பியின் மகன் மற்றும் மகள்களை தொடர்ந்து 20 வருடங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

ஒரு முறை தனது மருமகளை கூட அவர் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

1974 முதல் 1995 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில் அந்த நபருக்கு தற்போது 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.