1990 ஆம் ஆண்டு, மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்கள் காணாமற்போனதன் நினைவுநாள் நிகழ்வொன்று இன்று(5) நடைபெற்றது.
காணாமற்போனவர்களுக்காக, செங்கலடி – கொம்மாதுறை சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்தபோது கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் 25 வருடங்கள் கடந்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
Eelamurasu Australia Online News Portal