கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காணாமற்போனவர்களின் நினைவுநாள்

1990 ஆம் ஆண்டு, மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்கள் காணாமற்போனதன் நினைவுநாள் நிகழ்வொன்று இன்று(5) நடைபெற்றது.

காணாமற்போனவர்களுக்காக, செங்கலடி – கொம்மாதுறை சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்தபோது கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் 25  வருடங்கள் கடந்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.