உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது!

இன்று சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின் படி 22ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

நேற்றைய தினம் வரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 359 ஆக குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், இன்று அந்த எண்ணிக்கை தவறு எனவும் 253 பேர்களே உயிரிழந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கணக்கெடுப்பின் போது தவறுகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.