அவுஸ்.க்கு எதிரான எஞ்சிய போட்டியில் இருந்து மேத்யூஸ் விலகல்

இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் காயம் காரணமாக அவுஸ்ரேலியாவிற்கு எதிரான எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இலங்கை – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் மூன்று அவுஸ்ரேலியா வெற்றி பெற்று தொடரை 3-1 எனக் கைப்பற்றியுள்ளது.

நான்காவது போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியின்போது இலங்கை அணியின் கப்டன் மேத்யூஸ் காயம் அடைந்தார். இதனால் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், அந்த அணியில் இருந்து திசாரா பெரேரா, லக்‌ஷ்மண் சண்டகான் ஆகியோர் ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேருக்கும் பதிலாக உபுல் தரங்கா, நிரோஷன் டிக்வெல்லா, தசுன் ஷனகா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.