கொழும்பு புறக்கோட்டையில் வெடிபொருட்கள் மீட்பு!

நேற்று 8 இடங்களில், இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில், சுமார் 290 பேர் மரணித்துள்ளதாகவும், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில், சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே நாடு முழுவதும் பெரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,

கொழும்பு புறக்கோட்டை, பெஸ்தியான் மாவத்தை தனியார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து, 87 டெட்டனேட்டர் வகை வெடிப்பொருட்கள் சிலவற்றை  மீட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளார் தெரிவித்துள்ளார்.