குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வங்கள் – உலக தலைவர்கள் கடும் கண்­டம்!

இலங்­கையில்  ஆல­யங்கள் மற்றும்  ஹோட்­டல்­களில் நேற்று இடம்­பெற்ற  குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வங்கள்  தொடர்பில் உலக தலை­வர்கள் கடும் கண்­ட­னத்தை வெளியிட்­டுள்­ளனர்.  அமெ­ரிக்கா, இந்­தியா, பிரித்­தா­னியா, துருக்கி, பாகிஸ்தான் உள்­ளிட்ட நாடு­களின் தலை­வர்கள் இவ்­வாறு கண்­டனம்  வெளியிட்­டுள்­ளனர்.

பிரித்­தா­னியா 

பிரித்­தா­னிய பிர­தமர் தெரேசா மே தனது டுவிட்டர் பக்­கத்தில்  தெரி­வித்­துள்­ள­தா­வது,

இலங்­கை­யி­லுள்ள தேவா­ல­யங்கள் மற்றும் ஹோட்­டல்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை நட­வ­டிக்­கைகள் உண்­மை­யி­லேயே பயங்­க­ர­மா­னவை. இந்த துய­ர­மான நேரத்தில் பாதிக்­கப்­பட்ட அனை­வ­ருக்கும் என் ஆழ்ந்த அனு­தா­பங்­களை தெரி­வித்­துக்­கொள்­கின்றேன். இந்­நே­ரத்தில் அனை­வரும் ஒன்­றி­ணைந்து நம்­பிக்­கையை இழக்­காமல் செயற்­ப­ட­வேண்­டுயம் என்றும் அவர் கோரிக்கை விடுத்­துள்ளார்.

அமெ­ரிக்கா 

அமெ­ரிக்க ஜனா­தி­பதி  டொனல்ட் ட்ரம்ப்   தனது டுவிட்டர் தளத்தில் தெரி­வித்­துள்­ள­தா­வது

இலங்­கையின் தேவா­ல­யங்கள் மற்றும் ஹோட்­டல்­களில்  இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வங்­களில் 138 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.  600 க்கும் மேற்­பட்டோர் படு­கா­ய­ம­டைந்­துள்­ளனர்.   அமெ­ரிக்கா இலங்கை மக்­க­ளுக்கு  தனது ஆழ்ந்த அனு­தா­பங்­களை தெரி­வித்­துக்­கொள்­கின்­றது. நாம் இலங்­கைக்கு   உத­வு­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றோம்.

இந்­திய பிர­தமர் 

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி  இது  தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் மேலும்  தெரி­வித்­துள்­ள­தா­வது

’இலங்­கையில் நிகழ்ந்த இந்த கொடூ­ர­மான சம்­ப­வத்­துக்கு கடு­மை­யான கண்­ட­னத்தை தெரி­வித்துக் கொள்­கிறேன். இதைப்­போன்ற காட்­டு­மி­ராண்­டித்­த­னத்­துக்கு நமது பிராந்­தி­யத்தில் இட­மில்லை.

துய­ர­மான இந்த வேளையில் இலங்கை மக்­க­ளுடன் இந்­தியா துணை­யாக நிற்கும். இன்­றைய தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பத்­தா­ருக்கு ஆழ்ந்த இரங்­கலை தெரி­வித்துக் கொள்­வ­துடன், காய­ம­டைந்­த­வர்கள் விரைவில் குண­ம­டைய பிரார்த்­திக்­கிறேன்’ என மோடி குறிப்­பிட்­டுள்ளார்.

பாகிஸ்தான் 

பாகிஸ்தான் பிர­தமர்   இம்ரான் கான்  விடுத்­துள்ள செய்­தியில்

ஈஸ்டர் தினத்­தன்று நடத்­தப்­பட்ட இந்த கொடூ­ர­மான தீவி­ர­வாத தாக்­கு­தல்­க­ளுக்கு கடும் கண்­ட­னத்தை தெரி­வித்து கொள்­கிறேன். உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்கு எனது ஆழ்ந்த இரங்­கலை தெரி­வித்து கொள்­கிறேன் என்று பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் தெரி­வித்­துள்ளார்.

துருக்கி 

துருக்கி பிர­தமர் எண்­டோகன் தனது டுவிட்டர் பக்­கத்தில் கடு­மை­யான கண்­ட­னங்­களை தெரி­வித்­துள்ளார். அதில் இந்தத் தாக்­கு­த­லா­னது மனி­த­கு­லத்தின் மீது நடத்­தப்­பட்ட தாக்­குதல் என்று குறிப்­பிட்­டுள்ளார். துருக்­கிய மக்கள் சார்­பாக பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கும் இலங்கை மக்­க­ளுக்கும் எனது ஆழ்ந்த அனு­தா­பங்­களைத் தெரி­வித்து கொள்­கிறேன் என்று பதி­விட்­டுள்ளார்.

இஸ்ரேல் பிர­தமர்

இலங்­கையில் இடம்­பெற்ற குண்­டுத்­தாக்­கு­தலை அறிந்து கடும் அதிர்ச்­சி­ய­டைந்­த­தாக தெரி­வித்­துள்ள இஷ்ரேல் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாகு, நெருக்­க­டி­யான இந்த நேரத்தில் இலங்­கைக்கு உத­வி­களை மேற்­கொள்ள நாம் தயா­ராக இருக்­கிறோம். பயங்­க­ர­வா­தத்தை ஒழிக்க உலக நாடுகள் அனைத்தும் ஒன்­றி­னைய வேண்டும் என்று தெரி­வித்­துள்ளார்

விளா­டிமிர் புடின்

தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதலானது கொடூரத்தனமான தாக்குதல் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை இலங்கைக்கு அனுதாபங்களை தெரிவித்துள்ள புடின், இலங்கையுடன் இணைந்து சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராக போரடவும் நாம் தயாராகவுள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.