முஸ்லிம்களே! உங்கள் சொந்த நாடுகளிலேயே இருங்கள்!

உலகநாடுகளில் உள்ள முஸ்லீம்களை ஐஎஸ் அமைப்பின் பிரச்சாரத்தை நம்பவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் முஸ்லிம்களை தங்கள் சொந்த நாடுகளிலேயேயிருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிட்னியை சேர்ந்த மகிர் அப்சர் அலாம் என்ற ஐஎஸ் உறுப்பினரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்

குர்திஸ் ஆயுத குழுவினர் ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த இறுதி பகுதி மீது தாக்குதல் மேற்கொண்டவேளை மகிர் அலாமையும் அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கைதுசெய்துள்ளனர்.

24 வயது பல்கலைகழக மாணவரான அவர் 2014 இல் சிரியா சென்று ஐஎஸ் அமைப்பில் இணைந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் குறிப்பிடத்தாவது,

ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபுர் பக்கர் பக்தாதியின் உரையை செவிமடுத்தே நான் ஐஎஸ் அமைப்புடன் இணைந்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் என்னை போரிடுமாறு வற்புறுத்தினார்கள் என்னால் போரிடமுடியவில்லை என தெரிவித்துள்ள அவா மற்றொரு அவுஸ்திரேலிய ஐஎஸ் உறுப்பினரான தரக் ஹம்லேயுடன் இணைந்து ஐஎஸ் மருத்துவமனையில் பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் மிகவும் பயங்கரமான விடயங்களை பார்த்ததாக குறிப்பிட்டுள்ள அவர் ஐஎஸ் நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்ற ஈவிரக்கமற்ற சம்பவங்களை வர்ணித்துள்ளார்.

நான் இரத்த ஆறு ஓடுவதை பார்த்திருக்கின்றேன் என தெரிவித்துள்ள மிகவும் சாதாரண காரணங்களிற்காக பெண்களும் குழந்தைகளும் கொல்லப்படுவதையும் பார்த்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ஐஎஸ் ஆதரவாளர்களிற்கான தனது செய்தியில் அந்த அமைப்பின் பிரச்சாரம் தவறானது என்பதை புரிந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும் சிரியாவிலும் ஈராக்கிலும் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் வீழ்ச்சியடைய தொடங்கியவேளை எனது வேட்கை முடிவிற்கு வந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

நான் தப்பியோட முயன்றேன் முடியவில்லை எங்கு பார்த்தாலும் மரணம் நான் சிக்கிக்கொண்டேன் என அவர் தனது தற்போதைய நிலை குறித்து தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் அமைப்பின் பிரச்சாரங்கள் குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர்களது பிரச்சாரம் தவறானது என்பது எனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் அவர்களின் நாடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள ஏனைய அவுஸ்திரேலிய ஐஎஸ் உறுப்பினர்களை போன்று அலாமும் நாடு திரும்பவிரும்புவதாக தெரிவித்துள்ளார்.

நான் தண்டனையை அனுபவிக்க தயாராகவுள்ளேன், நாடு திரும்புவதற்காக எதனையும் செய்ய தயாராகவுள்ளேன்,என தெரிவித்துள்ள அவர் தான் அவுஸ்திரேலியாவிற்கு சென்றால் அந்த நாட்டிற்கு ஆபத்து என தெரிவிக்கப்படுவதையும் நிராகரித்துள்ளார்.