மெல்பேர்ண் நகரில் திடீர் பதற்றம் !

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இருக்குமீ பிளாக்ராவ்(Flagstaff ) தொடருந்து நிலையத்தில் திடீர் பதற்றம் ஏற்படுள்ளது. இதனால்  ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். பயணி ஒருவரிடம் துப்பாக்கி இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டு  காவல்துறையினர் அதிரடியாக களமிறங்கினர். என்னவென்று தெரியாத நிலையில் பயணிகள் அச்சமடைந்தனர்.

சோதனையின்போது சந்தேக நபர் ஒரு  தெருக்கலைஞர் எனத் தெரிவந்தது.  அக்கலைஞர் கையில் இசைக்கருவி அடங்கிய பை இருந்துள்ளது.

பயணிகளுக்கோ  பைக்குள் துப்பாக்கியை மறைத்து வைதிருப்பதாக சந்தேகம் எழவே காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதேநேரம் இசைக் கலைஞர்  இசை நிகழ்ச்சிக்காக தொடங்குமுன் மூச்சுப் பயிற்சி செய்துகொண்டிருந்தது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியிருந்தது.