அவுஸ்திரேலியாவுக்கு கல்வி கற்கச் சென்ற மாணவர்களுக்கு பாலியல் கொடுமையா?

ஆசிய நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு கல்வி கற்க செல்லும் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக அவுஸ்திரேலிய மனித உரிமை ஆணையம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

2015 அல்லது 2016 ஆம் ஆண்டுகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களில் 25 சதவிகிதம் பேர் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வழியிலும்,

51 சதவிகித மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கு காரணமான நபர்கள் குறித்து தெரிந்தும் அதனை வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள் என மனித உரிமை ஆணையம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

39 பல்கலைக்கழகங்களில் உள்ள 30,000 மாணவர்களிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பல்கலைக்கழக சூழலில் 1.4 சதவிகிதம் பேர் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்துள்ளனர். ஆண்களை விட, பெண்களே இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச மாணவர்கள் புகார் அளிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது, இதனால் அவர்களின் விசாவிற்கு ஏதேனும் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சம் தான் என End Rape on Campus Australia (EROC) அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குநரான ஷர்னா ப்ரெம்னர் தெரிவித்துள்ளார்.