மன்னார் மனித புதைக்குழி அகழ்வுப் பணி இடைநிறுத்தம்!

மன்னார் மனிதப் புதைக்குழியில் மேற்கொள்ளப்பட்டுவந்த அகழ்வுப் பணிகளை, மீள் அறிவித்தல் வழங்கும் வரை இடைநிறுத்துமாறு, மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா இன்று (08) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த புதைக்குழியிலிருந்து, அகழ்வின் மூலம் பெறப்பட்ட மனித எச்சங்களின் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை, மன்னார் நீதிமன்றம் நேற்று (07) அறிவித்ததையடுத்தே, அகழ்வுப் பணியாளர்களுக்கு, இன்றைய தினம் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.