புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படாத மனநல நோய்களால் துன்பப்படுகின்றனர். அதற்கு சிகிச்சை அளிக்கப்படாததால் நோயாளிகளிடையே புற்றுநோய் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படாத மனநல நோய்களால் துன்பப்படுகின்றனர். அதற்கு சிகிச்சை அளிக்கப்படாததால் நோயாளிகளிடையே புற்றுநோய் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் நோயுற்ற தன்மை, அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிப் படுதல், வாழ்க்கைத்தரம் குறைந்து, இறப்புக்கான வாய்ப்பு அதிகரிக்க வழிவகுக்கும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படாத மனநல நோய்களால் துன்பப்படுகின்றனர். அதற்கு சிகிச்சை அளிக்கப்படாததால் நோயாளிகளிடையே புற்றுநோய் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதன் விளைவாக, மன அழுத்தத்தை அடையாளம் காண்பது மற்றும் சிகிச்சை அளிப்பது புற்றுநோய் சிகிச்சையின் முக்கிய பகுதிகள் ஆகும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான ஐந்து மிகப்பெரிய புற்றுநோய்கள் உள்ளன. மார்பகபுற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், வாய்வழி குழிபுற்றுநோய், நுரையீரல் மற்றும் கோளரெக்டல் புற்று நோய் ஆகியவையாகும்.
47.2 சதவிகித புற்றுநோய்களுக்கு இந்த ஐந்து கணக்குகள் தான் காரணம்.இந்தியாவில் இருதய நோய்க்குப் பிறகு மரணத்தின் இரண்டாவது மிகவும் பொதுவான காரணியாக புற்றுநோய் உள்ளது. புகையிலையை பயன் படுத்துதல் (உதாரணத்துக்கு புகையிலை, சிகரெட்டு பழக்கம்) உலகளாவிய ரீதியில் மரணத்தை கொடுக்கக் கூடிய மிகப்பெரிய ஒன்றாகும்.
இந்தியாவில் புகையிலை தொடர்பான நோய்கள் காரணமாக ஒவ்வொரு நாளும் 2,500 பேர் இறக்கிறார்கள். புகையிலை (புகையிலை மற்றும் புகைபிடித்தல்) 2018-ம் ஆண்டில் ஆண்கள் மற்றும் பெண்களில் 3,17,928 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவில் உள்ளது. கிராமப்புற பெண்கள் நகர்ப்புற பெண்களை ஒப்பிடும்போது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகரிக்கும் ஆபத்தில் உள்ளனர்.
இந்தியாவில் உள்ள பெண்களில் மார்பக புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாகும். இந்திய நகரங்களில் உள்ள பெண்களில் நான்கில் ஒரு பகுதியினர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மார்பக, வாய்வழி, கர்ப்பப்பை வாய், இரைப்பை, நுரையீரல் மற்றும் கோளரெக்டல் புற்றுநோய் போன்ற முக்கிய பொது சுகாதாரம் தொடர்பான புற்றுநோய்கள் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் மட்டும் குணப்படுத்தப்படலாம்.
கடுமையான மன அழுத்தம் ஒரு நபரின் உறவு மற்றும் தினசரி வாழ்க்கையில் குறுக்கிடுகிறது. இது பெரும் மன தளர்ச்சி சீர்குலைவு என்று அழைக்கப்படுகிறது.
புற்றுநோயால் மனநிலை தொடர்பான அறிகுறிகள்:
நீங்கள் பின்வரும் அறிகுறிகளைக் கொண்டிருப்பின், உங்கள் மனநல சுகாதார நிபுணர் மற்றும் மனநல மருத்துவரிடம் பேசுங்கள், குறிப்பாக 2 வாரங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் மனநிலை தொடர்பான அறிகுறிகள்
1. மனம் வருந்துதல்
2. சோகமாக உணர்தல்
3. நம்பிக்கையற்றதாக உணர்தல்
4. எரிச்சலாக உணர்தல்
5. பயனற்றதாக உணர்தல்
6. நீங்கள் முன்பு அனுபவித்த நடவடிக்கைகள் மீது ஆர்வம் இழப்பு
7. நண்பர்கள் அல்லது குடும்பத்திலிருந்து விலக்கி வைத்தல்
8. தினசரி நடவடிக்கைகளை செய்ய ஊக்கத்தை இழத்தல்
9. அறிவாற்றல் குறைவு அறிகுறிகள்
10. கவனம் செலுத்தும் திறன் குறைவு
11. முடிவுகளை எடுக்க சிரமம்
12. எதிர்மறை எண்ணங்கள்.

உளவியல் சீர்குலைவுகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் எதிர்மறையான தாக்கத்தை பிரதிபளிக்கிறது. மேலும், புற்றுநோயை குணப்படுத்தும் மருத்துவர் மற்றும் மனநல நிபுணர்களின் கூட்டு சிகிச்சை இன்றியாமையாதது. இந்தியாவில், பெரும்பாலான புற்றுநோய் மையங்களில் முழுநேர மனநல நிபுணர்கள் இல்லை.
உளவியலாளர்கள் அல்லது மனநல சார்ந்த அமைப்புகள் போன்றவை முழுநேர மனநல சுகாதார நிபுணர்களுடன் தான் இதற்கு தீர்வுக்கான முடியம்.
மன அழுத்தம் மற்றும் சிகிச்சைமுறைகள்:
மன அழுத்தம் கொண்டவர்கள் பொதுவாக சிறப்பு சிகிச்சையிலிருந்து பயனடைகிறார்கள். மிதமான அல்லது கடுமையான மனத் தளர்ச்சி கொண்டவர்களுக்கு, உளவியல் சிகிச்சை மற்றும் மருந்துகளின் ஒரு கலவை பெரும்பாலும் மிகவும் பயனுள்ள அணுகுமுறை ஆகும். லேசான மனச்சோர்வு கொண்ட சிலருக்கு, ஒரு மனநல நிபுணருடன் பேசுவது மனச்சோர்வு அறிகுறிகளைத் தடுக்க போதுமானதாக இருக்கலாம்.
உளவியல் சிகிச்சை மனநல வல்லுநர்கள்:
உளவியல் சிகிச்சை மனநல வல்லுநர்கள், உரிமம் பெற்ற ஆலோசகர்கள், உளவியலாளர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோர் புற்று நோயை சமாளிக்கும் திறனை மேம்படுத்துதல் மற்றும் எதிர்மறை எண்ணங் களை சமாளிப்பது பற்றியும், குழு சிகிச்சை முறைகள் பற்றியும் கற்றுக்கொடுப்பார்கள். உளவியலாளர்கள், மருந்து களை பரிந்துரைக்கக்கூடிய மனநல நிபுணர்களின் ஆலோ சனையைப் பெறுவது மேலும் நன்று.
முதல் முறையாக புற்றுநோய் சிகிச்சைகள் அனுபவிக்கும் நோயாளிகள் அவர்கள் முன்கூட்டியே குமட்டல் மற்றும் வாந்தியையும் உருவாக்கும் மருந்துகளால் மிகவும் கவலை அடைந்து இருக்கலாம்.
பயிற்சி பெற்ற சிகிச்சையாளர்களால் மட்டுமே மனச்சோர்வை சமாளிக்கும் திறன்களைக் கற்பிக்க முடியும். இதில் நோயாளிகள் பல்வேறு சிகிச்சையின் பல்வேறு பகுதிகளை கற்பனை செய்து கொள்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆறுதல் அளிக்கும் திறனைக் கற்றுக்கொள்வது மிகக்குறைவு. நோயாளிகளை மன அழுத்தம், அசவுகரியம் அல்லது வலி ஆகியவற்றிலிருந்து கவனத்தை திசை திருப்ப சிகிச்சை அளிப்பார்கள்.
இந்த உத்திகள் சிகிச்சைக்கு முன்பும் பின்பும், குமட்டல் மற்றும் வாந்தியையும் குறைக்கலாம்.பக்க விளைவுகளின் தீவிரத்தை குறைக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. யோகா பயிற்சிகள் புற்று நோய்க்கான அறிகுறிகளை அல்லது சிகிச்சையின் போது ஏற்படும் பாதகமான விளைவுகளை நிர்வகிக்க உதவுகிறது. அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
மனம் மற்றும் உடல் நலம் ஆகியவை ஒருங்கிணைந்து காணப்பட்டால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கவலை, மன அழுத்தம், போன்றவைகளை குணப்படுத்தலாம்.
அறிவாற்றல்-நடத்தை சிகிச்சை:
புற்றுநோய்க்கு பிரத்யேக உளவியல் சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் புற்றுநோயாளிகளில் மன தளர்ச்சி அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளிகளுக்கு அறிவாற்றல் -நடத்தை சிகிச்சை முறையை பின்பற்றலாம் இது புற்றுநோய் இருந்தாலும் அதைக் கடந்து மன உணர்வை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருக்கும். மற்றும் ஒரு புற்றுநோயாளியின் மனதில் ஏற்படும் தவறான அல்லது எதிர்மறை எண்ணங்கள் மற்றும் நடத்தைகளை மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது.
ஆண்டிப்பிரசண்ட் மருந்து:
மனத் தளர்ச்சியின் தீவிரத்தன்மை காரணமாக ஏற்படும் லேசான மனச்சிக்களுக்கு சிகிச்சையளிக்க வழக்கமான மருந்துகளை பயன்படுத்த வேண்டாம். கடுமையான மனத் தளர்ச்சிக்கு மட்டும் ஆண்டிப்பிரசண்ட் மருந்துகள் உட்கொள்ள வேண்டும். பல்வேறு வகையான மனச்சோர்வு மருந்துகள் கிடைக்கின்றன. இந்த காரணிகளின் அடிப்படையில் மருத்துவர் மிகச் சிறந்த மனச்சோர்வைத் தேர்ந்தெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்வார்.
Eelamurasu Australia Online News Portal