யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது செய்துள்ள யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு விசேட காவல் துறை அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.
கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டுக் கும்பலொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்துயிருந்தது. இதன் போது அங்கிருந்த வாகனங்களும் எரிந்து நாசமாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் காவல் துறை விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந் நிலையில் யாழ். மாவட்ட விசேட குற்ற தடுப்பு பிரிவினர் நான்கு பேரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து வாள்கள் கோடாரிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.
விசேட குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டவர்களும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களையும் கோப்பாய் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதற்கமைய நீதி மன்றில் பிற்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை கோப்பாய் காவல் துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal