வட மாகா­ணத்­தில் 275 பாட­சா­லை­கள் மூடப்­பட வேண்­டிய நிலை­யில்!

50 க்கும் குறைவான மாணவர்கள் கற்கும் ஆயிரத்து 486 அரச பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர் நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.

நாட்­டில் 10 ஆயி­ரத்து 194 அரச பாட­சா­லை­கள் உள்­ளன. இவற்­றுள் 9 ஆயி­ரத்து 841 பாட­சா­லை­கள் மாகா­ண­ச­பை­க­ளால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்­றன. 353 பாட­சா­லை­கள், தேசிய பாட­சா­லை­கள் என்ற அடிப்­ப­டை­யில் கொழும்பு அர­சால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்­றன.

மாகாண சபை­க­ளின் கீழ் 4 ஆயி­ரத்து 59 மூன்­றாந்­தர வகைப் பாட­சா­லை­கள் இயங்­கு­கின்­றன. இவ்­வ­கை­யான பாட­சா­லை­க­ளில் ஆயி­ரத்து 486 பாட­சா­லை­கள் மாண­வர்­கள் இன்மை கார­ண­மாக மூடப்­பட வேண்­டிய நிலை­யில் உள்­ளன. இவை அனைத்­தும் கிரா­மப்­பு­றப் பாட­சா­லை­க­ளா­கும்.

மூடப்­பட வேண்­டிய பாட­சா­லை­க­ளில் அதி­க­மான பாட­சா­லை­கள் வட மாகா­ணத்­தில் உள்­ளன. இங்கு 275 பாட­சா­லை­கள் மூடப்­பட வேண்­டிய நிலை­யில் உள்­ளன. இதற்கு அடுத்த படி­யாக மத்­திய மாகா­ணத்­தில் 240, சப்­ர­க­முவ மாகா­ணத்­தில் 230 என்ற அடிப்­ப­டை­யில் மூடப்­பட வேண்­டிய பாட­சா­லை­கள் உள்­ளன.

மேல் மாகா­ணத்­தில் 73, தென் மாகா­ணத்­தில் 125, கிழக்கு மாகா­ணத்­தில் 141, வட­மேல் மாகா­ணத்­தில் 133, வட­மத்­திய மாகா­ணத்­தில் 111, ஊவா மாகா­ணத்­தில் 158, பாட­சா­லை­கள் மூடப்­ப­டும் ஆபத்­தில் உள்­ளன.

மாவட்ட அடிப்­ப­டை­யில் ஆகக் கூடு­த­லாக மூடப்­பட வேண்­டிய பாட­சா­லை­கள் கேகாலை மாவட்­டத்­தில் உள்­ளன. இங்கு 119 பாட­சா­லை­கள் மூடப்­பட வேண்­டி­யுள்­ளன. ஆகக்­கு­றைந்த மூடப்­பட வேண்­டிய பாட­சா­லை­ கள் கிளி­நொச்சி மாவட்­டத்­தில் உள்­ளன. இங்கு 16 பாட­சா­லை­கள் மூடப்­பட வேண்­டிய நிலை­யில் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.