என்னை காயப்படுத்துகிறார்கள் – ஹன்சிகா

நடிகை ஹன்சிகாவின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிய நிலையில், அவர் அளித்த பேட்டியில், விளம்பரம் தேட நானே என் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டதாக சிலர் கூறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹன்சிகாவின் அந்தரங்க படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பானது.
வாய்ப்புகள் இல்லாததால் ஹன்சிகாவே பரபரப்புக்காக படங்களை கசியவிட்டதாக வதந்தி கிளம்பியது. இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். ‘கடந்த சில வாரங்களுக்கு முன்பு நான் அமெரிக்காவுக்கு சென்றிருந்தேன். அப்பொழுது என் செல்போனில் பிரச்சனை ஏற்பட்டது. அதன் பிறகு தான் என் அந்தரங்க புகைப்படங்கள் கசிந்துள்ளன. அதுகுறித்து அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.
நான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படங்கள் அவை. அதை யாரோ ஹேக் செய்து கசியவிட்டுள்ளனர். விளம்பரம் தேட நானே என் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டதாக சிலர் கூறுவது வேதனை அளிக்கிறது. என் அந்தரங்க புகைப்படங்கள் கசிந்தது குறித்து சிலர் தெரிவித்துள்ள கருத்துகள் என்னை காயப்படுத்தி உள்ளன. என் செல்போன், ட்விட்டரை ஹேக் செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது’ என்று ஹன்சிகா கூறியுள்ளார்.