மொட்டுக்குள் பிளவு!

தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதென, தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த பெரமுனவால் எடுக்கப்படும் தீர்மானங்களில் கடும் அதிருப்தி கொண்டுள்ளவர்கள், அதிலிருந்து வெளியேறுவதற்குத் தீர்மானித்துள்ளனரென அறியமுடிகின்றது.

அதிருப்தியாளர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சியில் இணைந்து
கொள்ளவுள்ளனரென அறியமுடிகின்றது.

அதிருப்தியாளர்கள், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனரென, அந்தத் தகவல்கள் தெரிவித்தன.