அவுஸ்திரேலியாவினால் சிறிலங்கா கடலோர பாதுகாப்பு படைக்கு மூன்று துறைமுக படகுகள்

அவுஸ்த்ரேலியாவினால் சிறிலங்கா கடலோர பாதுகாப்பு படைக்கு மூன்று மூன்று துறைமுகு படகுகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வு கொழுப்பு துறைமுகத்தில் உள்ள சிறிலங்கா  கடற்படை தளத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  ருவான் விஜேவர்தன தலைமையில் இடம்பெற்றது.

இத் துறைமுக படகுகள் 2017 ஆம் ஆண்டு சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர் மால்கம் ட்ருன்பலினால் சிறிலங்கா கடலோர பாதுகாப்பு படைக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, குறித்த படகுகளை சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரையஸ் ஹட்ஷ்சன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

 

பின்னர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் படகுகளை பார்வையிட்டனர்.

இதன்போது கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகத்தினால் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகருக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் பரிசளிக்கப்பட்டது.

6.6மீற்றர் நீளமான இப்படகுகள், 34 நொட் உயர் வேகத்தில் பயணிக்கக்கூடிய திறன் கொண்டதுடன் ரேடார் சமிஞ்சை உபகரணங்களையும் கொண்டுள்ளன.

இந் நிகழ்வில் அவுஸ்திரேலியாவின் உள்நாட்டலுவல்கள் தொடர்பான ஆலோசகர் அமைச்சர் தாரா கொவனாக், பாதுகாப்பு படைககளின் பிரதம அதிகாரி, கடற்படை தளபதி, கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம், அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், சிரேஷ்ட கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்.