மாணவி படுகொலைக்கு காரணமாகிய 20 வயது இளைஞன்?

மெல்பேர்னில் தமிழர் செறிந்து வாழும் Bundoora பகுதியில் இடம்பெற்ற இஸ்ரேலிய மாணவி Aiia Maasarwe படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலையுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் நபரை தாங்கள் கைது செய்துள்ளதாக விக்டோரிய காவல் துறையினர்   அறிவித்துள்ளனர்.

மெல்பேர்ன் Greensborough பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் இன்று முற்பகல் 11.40 மணியவில் அவர் வீட்டில் வைத்து கைது செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களாக மாணவியின் படுகொலை மர்மம் நிறைந்ததாக காணப்பட்டது.

அத்துடன் கொலைக்கான எந்த சாட்சிகளும் கிடைக்காமல் காவல் துறையினர்  பொதுமக்களிடம் உதவி கோரியிருந்தனர்.