கிணற்றிலிருந்து மண் அகழ்வின்போது வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கிணற்றிலிருந்து மண் அகழும்போது பல மோட்டார் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அருகிலுள்ள இராணுவ முகாமுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவ் விடத்துக்கு விரைந்த இராணுவத்தினரும், காவல் துறையினரும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.