இரட்டை பிரஜாவுரிமை விடயத்தில் அமெரிக்கா தலையிடமுடியாது!

இரட்டை பிரஜாவுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம் என தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச  தனிப்பட்ட நபர்களின் உரிமைகளை அமெரிக்காவால் தடுக்க முடியாது என கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இரட்டை பிரஜாவுரிமை  குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இரட்டை பிரஜாவுரிமையை என்னால் தொடர்ந்து வைத்திருக்க முடியும் அல்லது கைவிடமுடியும் இது எனது தனிப்பட்ட விடயம் என கோத்தபாய தெரிவித்துள்ளார்.

இது எனது தனிப்பட்ட விடயம், இதன் காரணமாக நான் இரட்டை பிரஜாவுரிமைய தொடர்ந்தும் வைத்திருக்கலாம் அல்லது கைவிடலாம், இதனை எவரும் ஒரு விடயமாக்ககூடாது என கோத்தபாய தெரிவித்துள்ளார்.

எந்த நபரையும் கட்டிவைக்க முடியாது,அமெரிக்கா  தன்னை தாரளவாத ஜனநாயகத்தின் தந்தையென  அழைக்கின்றது இதன் காரணமாக அவர்களால் தனிப்பட்ட உரிமைகளிற்கு தடை விதிக்க முடியாது எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தயார் என எப்போதோ தெரிவித்துவிட்டேன் எனவும் அவர் குறிப்பி;ட்டுள்ளார்.