அவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்!

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் வடக்கு பகுதியில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் Bundoora பகுதியில் இருந்து பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்கட்டுள்ளது.

நேற்று (17) அதிகாலை பற்றைகளின் மறைவிலிருந்து வழிப்போக்கர்களால் பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இனம் காணப்பட்டுள்ள இளம்பெணின் பெயர் Aya Masarwe (வயது 21) என தெரியவந்துள்ள அதேவேளை குறித்த பெண் இஸ்ரேலை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

குறித்த பெண் LaTrobe – Bundoora பல்கலைக்ககழகத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

இதற்காக அவர் அவுஸ்திரேலிய தற்காலிக விசாவில் தங்கியிருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.