மிக மோசமான நிலைமையில் அவுஸ்திரேலியா!

இரண்டாம் உலக போருக்கு பின்னர் மிக மோசமான நிலைமை ஒன்று அவுஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

1939ஆம் ஆண்டிற்கு பின்னர் அதாவத சரியாக 80 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியா முகம் கொடுத்துள்ள மிக மோசமான வெப்பநிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் வீசும் அனல் காற்றால் சில பகுதிகளில் வெப்பநிலை சுமார் 45 டிகிரி செல்சியஸை எட்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வானிலை நிலைய அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். அடுத்த நான்கு நாட்களில் சராசரி அளவைக் காட்டிலும் அங்கு வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் கூறினர்.

அவுஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியில் சராசரி அளவைக் காட்டிலும் 10 முதல் 15 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

அடிலெய்ட், சிட்னியின் மேற்குப் பகுதி, நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் சில வட்டாரங்கள், விக்டோரியா மாநிலம் ஆகியவை பெரும் அபாயத்தில் இருப்பதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

தலைநகர் கான்பரா தொடர்ந்து ஐந்தாண்டாகக் கடும் அனல் காற்றால் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.

இவ்வார இறுதியில் சிட்னியும் பாதிக்கப்படும் என்று முன்னுரைக்கப்படுகிறது. அங்கு வெப்பநிலை 30 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.