சிறிலங்கா-அமெரிக்கா முக்கிய பேச்சுவார்த்தை!

சிறிலங்காவில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு பின்னர் உருவாகியுள்ள நிலைமை குறித்து  அமெரிக்காவும் சிறிலங்காவும்  முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன.

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்;டுள்ள  நிதியமைச்சர் மங்களசமரவீர தலைமையிலான குழுவினர் அமெரி;க்காவின் தலைமை பிரதி உதவி இராஜாங்க செயலாளர்  அலைஸ் வெல்சையும் மில்லிலேனியம்  சலஞ்ச்  ஒத்துழைப்பின் பிரதம அதிகாரியையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்

அலைஸ் வெல்ஸ் மற்றும் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஆகியோருடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம் என  பொருளாதார சீர்திருத்த விவகாரங்களிற்கான அமைச்சர் ஹர்சா டி சில்வா தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

பிராந்திய விவகாரங்கள்,பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.