சுமந்திரனின் கனவும் ஒருபோதும் நிறைவேறாது! – சேஹான் சேமசிங்க

புதிய அரசியலமைப்பின் வரைபை மட்டுமல்ல அதன் யோசனைகளையும் கடுமையாக எதிர்ப்போம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சேஹான் சேமசிங்க, நாட்டுக்கு அவசியமற்ற அரசியலமைப்பினை உருவாக்க முயற்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இன்று வடக்கு மக்களால் வெறுக்கப்பட்டவராக சித்தரிக்கப்படுகின்றார். எனவே அவரின் கனவு ஒருபோதும் நிறைவேறாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் புதிய அரசியலமைப்பினை கோரும்  கூட்டமைப்பினர்   வடக்கு கிழக்கு உட்பட  நாட்டில் வாழும்  தமிழ்  மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு   தீர்வு காண இதுரையில் தமது எதிர்கட்சி பதவியை பயன்படுத்தவில்லை. வடக்கு மக்களும் புதிய அரசியலமைப்பை கோரவில்லை எனவும் தெரிவித்தார்.