பன்­னாட்டு நீதித்­து­றை­யின் தலை­யீடு அவசியமில்லை!-சபா­நா­ய­கர் கரு­ஜ­ய­சூ­ரிய

பன்­னாட்டு நீதித்­து­றை­யின் தலை­யீடு இனி­யும் இலங்­கைக்­குத் தேவை­யில்லை. இலங்கை நீதித்­து­றை­யின் சுயா­தீ­னம் அதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. இவ்­வாறு சபா­நா­ய­கர் கரு­ஜ­ய­சூ­ரிய தெரி­வித்­துள்­ளார்.

சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரி­ய­வுக்­கும், சர்வ மதத் தலை­வர்­க­ளுக்­கும் இடையே நேற்­று­முன்­தி­னம் சந்­திப்பு நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

கடந்த உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­வே­ன­வுக்­கும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கும் இடையே கருத்து மோதல்­கள் வலுப்­பெற்­றன. அதைத் தணித்து இரு­வ­ருக்­கும் இடை­யில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த நான் தொடர்ந்து முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்­தேன்.

அரச தலை­வர் என்­னைத் தலைமை அமைச்­சர் பொறுப்பை ஏற்­றுக் கொள்­ளுங்­கள் என்று பல தட­வை­கள் கோரி­னார். அரச தலை­வ­ராக மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், தலைமை அமைச்­ச­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் செயற்­ப­டவே 2018ஆம் ஆண்டு மக்­க­ளின் ஆணை கிடைத்­தது. அதை மீறிச் செல்ல நான் தயா­ராக இருக்­க­வில்லை.

கடந்த இரு மாதத்­தில் யார் வெற்றி பெற்­ற­னர் என்­பது முக்­கி­யம் அல்ல. நாட்­டுக்­குப் பேரி­ழப்பு ஏற்­பட்­டுள்­ளது. உல­கத்­துக்கே முன்­னு­தா­ர­ண­மாக இருந்த எமது நாட்­டின் நாடா­ளு­மன்ற மதிப்­புக்கு பெரும் கறை படிந்­துள்­ளது. சுயா­தீ­ன­மா­கச் செயற்­பட்ட உயர் நீதி­மன்­றம் நாட்­டுக்­குப் பெரும் மதிப்பை ஏற்­ப­டுத்­திக் கொடுத்­துள்­ளது. இலங்­கை­யின் நீதித்­துறை சுயா­தீ­ன­மா­கச் செயற்­ப­டு­கின்­றது. இனி பன்­னாட்டு நீதித்­து­றை­யின் தலை­யீடு தேவை­யற்ற என்­றார்.

இதே­வேளை, இலங்­கை­யின் நீதித்­துறை சுயா­தீ­ன­மா­கச் செயற்­ப­டு­கின்­றது. பன்­னாட்டு நீதித்­து­றை­யின் தலை­யீடு தேவை­யில்லை என்று மக்­கள் விடு­தலை முன்­னணி, நாடா­ளு­மன்­றத்­தில் இடைக்­கால கணக்கு அறிக்கை சமர்­பிக்­கப்­பட்­ட­போது தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.