ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: மெல்போர்னில் பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பெர்த் டெஸ்ட் 18-ந்திகதி முடிவடைந்த நிலையில், இந்திய வீரர்கள் இன்று மெல்போர்னில் பயிற்சியை தொடங்கினார்கள்.

பெர்த் டெஸ்ட் கடந்த 14-ந்திகதி முதல் 18-ந்திகதி வரை நடைபெற்றது. ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என அழைக்கப்படும் 3-வது போட்டி மெல்போர்னில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்குகிறது. இரண்டு டெஸ்டிற்கும் இடையில் சுமார் 8 நாட்கள் இடைவெளி உள்ளது.


18-ந்திகதி பெர்த்தில் முடிந்த டெஸ்டிற்குப்பின் இந்தியா பயிற்சி ஏதும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் இன்று மெல்போர்ன் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டனர். மெல்போர்ன் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் இந்தியா இரண்டு முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வாய்ப்புள்ளது.