பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக ஜயசுந்தர நியமனம்!

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக யாழ் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட காவல் துறை  அத்தியட்சகர் எஸ்.ஈ.ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஜயசுந்தர அமைச்சுகளின் இ​ணைப்பு பிரிவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது வெற்றிடத்துக்கு பொலிஸ் உடற்பயிற்சி நிறுவனத்தின் பிரதான நிர்வாக அதிகாரியாக கடமையாற்றி வந்த யூ.பீ.ஏ.டீ.கே.பீ. கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.